திமுக கூட்டணி வேட்பாளர் வசந்தகுமாரை வச்சி செய்த கன்னியாகுமரி இளைஞர்கள்!! வெளியான வீடியோ!!
kanniyakumari boys viral video in facebook
தமிழகத்தில் வரும் 18 ம் தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிமுக , திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறது.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு கன்னியாகுமரி தொகுதிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக வசந்தகுமார் போட்டியிட உள்ளார். இருவரும் கன்னியாகுமரி தொகுதியில் தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் அவர்கள், கன்னியாகுமரியில் உள்ள ஒரு பாலத்தின் மீது நின்றவாறு " நீங்க சென்ற முறை ஓட்டு போட்டு பொன்.ராதாகிருஷ்ணன் செய்ததை பாருங்க" என கூறி அங்கு அவர் கட்டிய பாலத்தை காட்டுகின்ற்னர்.
பின்னர், அடுத்தமுறை நீங்கள் வசந்தகுமாருக்கு ஓட்டு போட்டால் அவர் செய்யபோவதை பாருங்க" என கூறி வசந்தகுமாரின் வசந்த்&கோ நிறுவனத்தின் பிரமாண்டமான கட்டிடத்தை காட்டுகின்றனர்.
இதன்மூலம் அவர்கள் பொன்னார் வந்தால், மக்களுக்கு பணியாற்றுவார் என்றும், வசந்தகுமார் வந்தால் சொத்து சேர்ப்பதில் தான் கவனம் செலுத்துவார் என்றும் நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
English Summary
kanniyakumari boys viral video in facebook