காஞ்சிபுரத்தில் பரபரப்பு.! பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை முயற்சி.!!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு.! பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை முயற்சி.!!
இந்தியாவில் மன அழுத்தத்தின் காரணமாக, பல துறையில் பணி புரிந்து வருபவர்களும் பல்வேறு விதமாக தற்கொலை செய்து கொண்டு வருவது மட்டுமல்லாமல், பள்ளியி படிக்கும் மாணவர்களும் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில், காஞ்சிபுரத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் திட்டியதால், மாணவன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், இவர் அங்கு ஒரு பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 15 வயதில் ரகு என்ற ஒரு மகன் உள்ளார். அவரது மகன் ரகு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், ரகு நேற்று பள்ளிக்கு தாமதமாக சென்றுள்ளார். இதனால் அவர் வகுப்பாசிரியர் மாணவன் ரகுவை வகுப்பிற்கு வெளியே நிற்கும்படி கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளியின் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளான்.
இதைத் தொடர்ந்து, உடனடியாக அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
kanchipuram school student suicide attempt