பேருந்தோடு சேர்த்து நசுக்கப்படும் பெண் - பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி..!
kanchipuram-bus-lorry-accident
காஞ்சிபுரம் உத்திரமேரூரில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே நெல்வாய் கூட்டுரோடு என்ற இடத்தில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்ற பேருந்து நிறுத்தத்தில் நின்றது.
அப்போது பக்கவாட்டு சாலையில் வேகமாமக வந்த லாரி இருசக்கரவானத்தில் வந்த ஒருவர் மீது மோதி, அங்கு பேருந்திற்காக காத்திருந்த ஒரு பெண்னை பேருந்தோடு சேர்த்து நசுக்கியது. இதில் அந்த பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் அறிந்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆசிரியையாக பணியாற்றி வரும் பெண் சிகிச்சை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
English Summary
kanchipuram-bus-lorry-accident