தினகரனுக்கு முன்பே முந்திக்கொண்ட திவாகரன் மகன்.. தமிழக அரசியலில் நிகழ்ந்த திடுக்கிடும் திருப்பம்..? - Seithipunal
Seithipunal


தினகரனே கட்சி தொடங்குவது குறித்து யோசனையில் இருக்கும் நிலையில்  திவாகரன் மகன் ஜெயானந்த் புதிய அமைப்பு ஒன்றினை தொடங்கி உள்ளார்.

சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் தான் அதனை தொடங்க போவதாக அறிவித்து உள்ளார். தனது  புதிய அமைப்பிற்கான அடையாள சின்னத்தை நேற்று தன் முகநுால் பக்கத்தில் வெளியிட்டார் ஜெயானந்த்.

தினகரன் தனி அணியாக செயல்பட, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், திவாகரன் மகன் ஜெயானந்த், புதிய அமைப்பை துவக்கி உள்ளது இரண்டாக பிரிந்த அதிமுக கட்சிக்குள் மேலும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

திவாகரன் எப்படியாவது தனது மகன் வருங்காலத்தில் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக வர வேண்டும் என்று விரும்புகிறார்.

இந்த நிலையில் தான் தனது மகன் ஜெயானந்திற்கு தனது அனுபவங்களை எல்லாம் முழுவதும் இறக்கி மேற்கேற்றி வருகிறார்.

இதனை தொடர்ந்தே சமீபத்தில் தன் முகநுால் பக்கத்தில், புதிய அமைப்பு துவங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் ஜெயானந்த்.

அதில், அவர் கூறியிருந்ததாவது:

தை திருநாளை தொடர்ந்து, மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் பெயரில், ஒரு மக்கள் பணியகம் துவக்கப்படும். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கப்படும்.

பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள, ஒரு சமூக வலைதளம் உருவாக்கப்படும்.

என்னை சந்தித்த இளைஞர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இந்த இயக்கம் துவக்கப்படுகிறது.

இதற்கான அடுத்தகட்ட நகர்வை, என் முகநுால் வழியாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் ஒரு பகுதியாக தான் சுபாஷ் சந்திரபோஸ் படத்தின் கீழே, 'போஸ் மக்கள் பணியகம்' என எழுதப்பட்ட லோகோவை, முகநுால் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayananth started new political role yesterday


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->