பாமக திடீர் போராட்டம்! ஜெயிலில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர்கள்! மனித உரிமை ஆணையம் களமிறங்குமா?!
பாமக திடீர் போராட்டம்! ஜெயிலில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞர்கள்! மனித உரிமை ஆணையம் களமிறங்குமா?!
மதுராந்தகத்தை சேர்ந்த பாமக கட்சியை சார்ந்த இளைஞர்கள் சபரி, கார்த்திக், எழிலரசன் ஆகியோர் ஒரு சிறு தகராறு வழக்கில் மதுராந்தகம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 2 நாட்களாக சிறையில் உள்ள பாமகவினர் 3 பேரையும், சிறைக்காவலர்கள் மற்றும் வார்டன்கள் கடுமையாக தாக்கியும், உணவு, மருந்து எதுவும் வழங்காமல் அடித்து உதைத்தாக தெரிகிறது.
செய்தியறிந்த பாமக மாநில துணை பொது செயலாளர் பொன்.கங்காதரன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் உமாபதி, ராதாகிருஷ்ணன், கோபாலகண்ணன், ஏகாம்பரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் செங்கல்பட்டு மாவட்ட சிறை முன்பு நேற்று மாலை திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, சிறையில் உள்ள பாமகவினர் 3 பேரை, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சிறைத்துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன குரல் எழுப்பினார்கள்.
திடீர் போராட்டம் தகலறிந்து செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், டவுன் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்களை, பாமகவினர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பாமக மாநில துணைபொது செயலாளர் பொன்.கங்காதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட சபரி, கார்த்திக், எழிலரசன் ஆகியோரை கடந்த 2 நாட்களாக சிறையில் காவலர்கள் கண்மூடித்தனமாக அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார். நேற்று காலை அவர்களது உறவினர்கள், சிறையில் நேராக சந்தித்தபோது, அவர்களுக்கு உடல் முழுவதும் காயம் இருப்பதை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். இருவர் நடக்க முடியாத அளவிற்கு தமிழக சிறை வரலாற்றிலே இல்லாத அளவிற்கு அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். மேலும் உணவு, மருந்துகள் கூட தர மறுத்துவிட்டதாக கூறினர். மேலும் இந்த செயல் மனித உரிமை மீறல் ஆகும். எதிர்தரப்பினர் புகார் அளிக்காமல் வலிந்து கைது செய்து இளைஞர்களை தாக்கிய காவல் ஆய்வாளர் ஸ்டாலின் அந்தோணி ராஜ் உட்பட சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட நீதிபதி, எஸ்பி, கலெக்டர், சிறைத்துறை இயக்குனர் மற்றும் மனித உரிமை கமிஷனில் புகார் அளித்துள்ளோம் என்றும், இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் நேற்றுமுதல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை மனித உரிமை ஆணையம் கவனத்தில் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
English Summary
jailar and police attacks pmk youth persons in chengalpet jail