ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகிவிடும் என்பதற்காக., தனது உடலை கூலிப்படைக்கு விலையாக கொடுத்த அதிர்ச்சி சம்பவம்!.
சென்னை பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கில் வெளியாகும் பகீர் தகவல்கள்.
சென்னை பிசியோதெரபிஸ்ட் கூலிப்படையினரால், திருச்சியில் கொல்லப்பட்ட சம்பவத்தில், கைதான மாணவி பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்வதற்காக, கூலிப்படையினருக்கு தன்னையே விலையாக கொடுத்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
சென்னை தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்த விஜயகுமார் என்பவரை, கடத்திச்சென்று கூலிப்படை வைத்து கொலை செய்ததாக சென்னை நுங்கம்பாக்கத்தில் தங்கி வேலை பார்த்துக் கொண்டே சி.ஏ. படித்து வந்த மாணவி ஈஸ்வரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
நட்பாக பழகிய தன்னை ஆசைக்கு இணங்கவைத்து வாழ்க்கையை சீரழித்ததோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு 2வது திருமணம் செய்து கொள்ள மிரட்டியதால் பிசியோதெரபிஸ்ட் விஜயகுமாரை தீர்த்து கட்டியதாக மாணவி ஈஸ்வரி வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதற்காக கூலிப்படையாக செயல்பட்ட மாரிமுத்து , கணேசன், குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒரு மாணவிக்கு கூலிப்படையினருக்கு கொடுக்க 2 லட்சம் ரூபாய் எப்படி வந்தது என்ற நோக்கில் மேற்கொண்ட விசாரணையில், மாணவி ஈஸ்வரி தன்னையே விலையாக கொடுத்து கூலிப்படையை தயார் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உறையூரை சேர்ந்த மாணவியின் நண்பர் மூலமாக கூலிப்படை தலைவன் மாரிமுத்து அறிமுகமாகி உள்ளான். 2 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்ட நிலையில் அவரால் முழுத் தொகையை கொடுக்க இயலவில்லை என்பதால் பணத்திற்கு பதிலாக படுக்கையைக் பகிர்ந்து கொள்ள கூலிப்படையினர் நிர்ப்பந்தித்து உள்ளனர் என்று கூறப்படுகிறது.
விஜயகுமாரை கொலை செய்த பின்னர், கூலிப்படையினர் மூவரும் காவிரி கரையில் மாணவியுடன் தனிமையை கழித்துள்ளனர். அதன் பிறகும் கூலிப்படையினர் பணம் கொடுக்கும் வரை அவரை விடாமல் தொடர்ந்துள்ளனர்.
பின்னர் அலுவலகத்தில் இருந்து அவரது வங்கி கணக்கிற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பணத்தை எடுத்து கூலிப்படை தலைவன் மாரிமுத்துவிடம் கொடுத்த பின்னர் தான் ஈஸ்வரியை கூலிப்படையினர் விடுவித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, கூலிப்படையினரை மாணவியுடன் தங்குவதற்கு அனுமதித்த திருச்சி லாட்ஜில் விசாரணை நடத்திய காவல்துறையினர், மாணவி ஈஸ்வரிக்கு கூலிப்படையினரை அறிமுகம் செய்து வைத்த நண்பரை தேடிவருகின்றனர்.
English Summary
Information on the case of the Chennai physiotherapist murder case