அதிமுக காரர்களிடம் இருந்து எங்கள் பெற்றோடைகளை காப்பாற்றுங்கள்! கண்ணீர் மல்க மனு கொடுத்து ராணுவ வீரர்கள்..!!
“எங்களைப் பெத்தவங்களை நீங்க தான் காப்பாத்தனும்”,,! ராணுவ உடையில் வந்து மனு கொடுத்து ராணுவ வீரர்கள்..!!
இந்த நாட்டைக் காக்கும் மிக உயரிய அர்ப்பணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள இரண்டு ராணுவ வீரர்கள் தங்கள் வீடுகளைப் பாதுகாக்குமாறு, கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா குள்ளப்பபுரம் அருகே உள்ள மருகால்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார், காளிதாஸ் ஆகியோர் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர்களாகப் பணி புரிந்து வருகின்றனர்.
இருவரும், நேற்று தங்களது, ராணுவ சீருடையில் வந்து, தேனி கலெக்டரிடம் மனு அளித்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.
சதீஸ்குமார் தன் மனுவில், “எங்கள் தாத்தா காலத்தில் இருந்து, நாங்கள் அனுபவித்து வரும், எங்களுக்குச் சொந்தமான நிலத்தை, மருகால்பட்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், என் அப்பா அம்மாவிடம், அந்த நிலத்தை, தனது பெயருக்கு மாற்றித் தரும்படி, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, அவர்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்.
காளிதாஸ் தன் மனுவில், “என் வீட்டின் அருகில் குடியிருக்கும் சிலர், எனது பெற்றோர் குடி நீர் பிடிக்கச் செல்லும் போது, மிரட்டி வருகின்றனர். எனவே, எங்கள் பெற்றோருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்.
தேனி கலெக்டர், பல்லவி பல்தேவ், அவர்களது கோரிக்கையை, ஏற்று, விசாரணை செய்து, உடன் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உள்ளார்.
English Summary
INDIAN ARMY MAN COMPLAINT AGAINST ADMK PARTY MEMBERS