யார் யாரோ வீட்டிற்குள் வருகிறார்கள் - அவமானம் தாங்காமல் அரளி விதையை தின்று பெண் தேடிக்கொண்ட முடிவு..? உயிருக்கு போராடும் கணவர்.!
Indebtedness awful, OLEANDER
கடன் தொல்லையால் அரளி விதையை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை செய்துகொண்ட பெண் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய கம்பம் வடக்கு காவல்துறையினர் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .
கம்பம் அருகே சுருளிப்பட்டி கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்தவர் வனராஜ் (50) தச்சுத்தொழிலாளி. மனைவி விஜயா (40). இந்த தம்பதிக்கு கீதா என்ற மகளும், கவுதம்(18) என்ற மகனும் உள்ளனர்.
கீதாவுக்கு திருமணம் முடிந்து கணவருடன் கோவையில் வசித்து வருகிறார். கவுதம் படித்து வருகிறார். மகளின் திருமண செலவுக்காக வனராஜ் அதே பகுதியை சேர்ந்த 6 பேரிடம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வரை கடன் வாங்கியுள்ளார்.
இதற்காக அவர்களுக்கு மாத, வார, வட்டி கொடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வனராஜால் கந்துவட்டிக்காரர்களுக்கு வட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடன் கொடுத்தவர்கள் அசல், வட்டி கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். ஒரு சிலர் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டுள்ளனர். இதனால் மனம் உடைந்த கணவன்-மனைவி இருவரும்
வீட்டை விட்டு வெளியேறி கம்பம் கோம்பை ரோட்டில் உள்ள நாக கன்னியம்மன் கோவில் பகுதிக்குச் சென்றவர்கள், அருகே இருந்த ஓடையிலிருந்து அரளி செடியின் விதைகளை பறித்து தின்றுள்ளனர்.
பின்னர் இது குறித்து மகன் கவுதமுக்கு, வனராஜ் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே கவுதம் உறவினர்களுடன் அப்பகுதிக்குச் சென்று பெற்றோரைத் தேடியுள்ளார். பின்னர் மயங்கிக்கிடந்த அவர்களை உறவினர்கள் போலீசாரின் உதவியோடு மீட்டு, சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜயா இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வனராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் கைப்பற்றிய வனராஜ், விஜயா கையெழுத்துடன் உள்ள உருக்கமான கடிதத்தில், நாகஜோதி, பவளக்கொடி, அழகுராணி, சிங்கம், முருகேஸ்வரி, சாந்தா ஆகியோரிடம் மாத, வார வட்டிக்காக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறோம்.
இந்த கடன் தொல்லையால் தவறான வார்த்தைகள் பேசி அவமானப்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியே அனுப்பி கதவை அடைத்து வெளியே தள்ளி விட்டார்கள்.
இதனால் மூன்று நாட்கள் உறவினர்கள் வீட்டில் இருந்தோம். கடன் கொடுத்தவர்கள் அங்கேயும் வந்து எங்களை சத்தம் போட்டார்கள். இதனால் அவர்களும் வெளியே அனுப்பி விட்டனர். என் மகனை படிக்க விடாமல் தொந்தரவு செய்கிறார்கள்.
கடன் தொல்லையால் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இவர்களுக்கு அசலுக்கு மேல் வட்டி செலுத்தி இருக்கிறோம்.
ஒரு மாதம் வட்டி கொடுக்க தாமதம் ஆனாலும் சத்தம் போடுகிறார்கள். பணம் கொடு என்று கூறி நாகஜோதி என்பவர் எங்கள் வீட்டில் தங்கி சமைத்து சாப்பிடுகிறார். எங்களுக்கு எதுவானாலும் இவர்கள் தான் பொறுப்பு. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Indebtedness awful, OLEANDER