3 ஆவது நாளாக கிறிஸ்டி நிறுவனத்தில் தொடரும் ரெய்டு..! பல திடுக்கிடும் தகவல் வெளியானது..!!
கடந்த இரண்டு நாட்களாக, பள்ளிகளுக்கு முட்டை, பருப்பு போன்ற உணவு பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் சார்ந்த 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
குமாரசாமி என்பவர் நடத்திவரும் கிறிஸ்டி ஃப்ரிட்ஜ்கிராம் என்ற நிறுவனம், அரசு பள்ளிகளுக்கு முட்டை, பருப்பு ஆகிய உணவு பொருட்களை விநியோகம் செய்துவருகிறது.
குமாரசாமியின் திருவான்மியூர் இல்லம், அவரது நிறுவனம், அலுவலகங்கள், உணவு பொருட்களை விநியோகம் செய்யும் மற்ற நிறுவனங்கள், அவற்றின் அலுவலகங்கள் என சென்னை மற்றும் திருச்செங்கோட்டில் சுமார் 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மற்றும் திருச்செங்கோட்டில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 3 ஆவது நாளாக, நாமக்கல் கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரி துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இதுகுறித்து வருமானவரி துறையினர் தெரிவிக்கையில்:-
நாமக்கல் கிறிஸ்டி நிறுவனத்தில் இதுவரை 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்டி நிறுவனம் வெளிநாடுகளிலும் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளது .
மேலும், 1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரி துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
English Summary
Income Tax Raid Namakal For School Egg