தந்தைக்கு தெரியவந்த மகளின் கள்ளக்காதல் விஷயம்.! ஆத்திரத்தில் தந்தை எடுத்த அதிரடி முடிவால் நேர்ந்த சோகம்.!!
in viruthunagar a father killed her daughter due to her illegal affair
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறுக்கு அருகேயுள்ள விவிவி நகரை சார்ந்தவர் கணேசன். இவர் அங்குள்ள பகுதிகளில் சம்சா விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருக்கு மொத்தம் மூன்று பெண் மகள்கள் உள்ளனர். இவரது மூன்றாவது மகளின் பெயர் ஆனந்தி (30).
ஆனந்திக்கும் அதே பகுதியை சார்ந்த ரமேஷ் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்து., இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்த ஆனந்தி தனது கணவருடன் அங்குள்ள நரிக்குடி மேலகள்ளிகுளம் பகுதியில் வசித்து வருகிறார்.
அந்த பகுதியின் தலையாளியாக ஆனந்தி செயல்பட்டு வந்த நிலையில்., கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக ஆனந்தியின் கணவர் இறந்து விட்டார். இதனையடுத்து தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தந்தை வீட்டின் அருகே உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில்., அங்குள்ள கல்குறிச்சி பகுதியின் தலையாரியாக செயல்பட்டு வரும் கணபதிக்கும் ஆனந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
கணபத்திற்கு ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில்., ஆனந்தி சகோதரியின் கணவர் கல்குறிச்சி பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று கணபதி., ஆனந்தி சகோதரியின் கணவரை இடைமறித்து ஆனந்தியை தனக்கு மனம் முடித்து தரக்கூறி முறையிட்டுள்ளார்.
இதனால் வருத்தமடைந்த அவர்., தனது மாமனாரிடம் விஷயத்தை சொல்லி வருத்தப்படவே., ஆத்திரமடைந்த கணேசன் ஆனந்தியின் இல்லத்திற்கு இரவு 1 மணிக்கு சென்று அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு., பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று விஷயத்தை கூறி சரண்டைத்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in viruthunagar a father killed her daughter due to her illegal affair