ரூ.500 இலஞ்சம் கேட்ட மின்வாரிய அதிகாரி.! தேடி சொருவப்பட்ட ஆப்பு., நீதிபதியும் சேர்ந்து ஆப்படித்ததால் கலங்கிப்போன அதிகாரி.!!
in vilupuram court judge release a judgement about Bribery case
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியை அடுத்துள்ள இராதாபுரம் கிராமத்தை சார்ந்தவர் வீராச்சாமி. இவர் கடந்த 2008 ம் வருடம் தனது இல்லத்திற்க்கு மின் இணைப்பு வழங்கக்கூறி., மதுரப்பாக்கத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் மனு வழங்கியுள்ளார்.
அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த உதவி செயற்பொறியாளர் திருஞான சம்மந்திடம் விண்ணப்ப மனுவை வழங்கியுள்ளார். இவரது மனுவை பெற்ற அதிகாரி ரூ.500 இலஞ்சம் வழங்கும் பட்சத்தில் மின் இணைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு வெளியே வந்த வீராசாமி இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் மனு வழங்கினார். இவரது புகாரை பெற்ற அதிகாரிகள் உடனடியாக தாம் யார் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தாமல்., அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியின் அறிவுரையை திருஞானசம்பந்திடம் ரூ.500 ஐ வழங்கியுள்ளார். இதனை இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பிரியா., இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு சுமார் 5 வருடம் சிறை தண்டனையும்., ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
English Summary
in vilupuram court judge release a judgement about Bribery case