எதிரெதிரே வந்த வாகனங்கள்.! நொடிப்பொழுதில் ஏற்பட்ட விபத்து.!! 4 பேர் பரிதாப பலி., தாயாரை தேடி கதறியழுத குழந்தை.!!
in vilupuram accident bus and van 4 peoples died and 24 peoples injured
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.காரைக்குடி பகுதியை சார்ந்தவர் அங்குசாமி (50). இவருக்கு சொந்தமான வேனின் மூலம் சென்னையை நோக்கி உறவினர்களுடன் இன்ப சுற்றுலா செல்வதற்கு தயாராகி புறப்பட்டார். வேனின் உரிமையாளரான அங்குசாமி வாகனத்தை இயக்கினார். இவர்கள் பயணம் செய்த வேனில் அங்குசாமியின் மனைவி லட்சுமி (வயது 48)., உறவினர் உமாபதி மற்றும் அவரது மனைவி விஜி (வயது 28) என்று பல உறவினர்கள் இருந்தனர்.
சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிய அரசு விரைவு பெருந்தது திருச்சியை நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தது. இந்த பேருந்தை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வக்கிரப்பட்டியை சார்ந்த அருணாநந்தன் என்பவர் இயக்கினார். அதே பேருந்தில் மாற்று ஓட்டுநராக குப்பத்துபட்டியை சார்ந்த பிரபு (வயது 37) என்பவர் இருந்தார்.
இந்த பேருந்து மயிலம் அருகேயுள்ள விலங்கம்பாடியை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த சமயத்தில்., பேருந்தின் ஓட்டுநர் மாற்று சாலையில் சென்றார்., இதனை அறிந்து வாகனத்தை நிறுத்தவே., அந்த நேரத்தில் வந்த வேன் எதிர்பாராத விதமாக நொடிப்பொழுதில் மோதியது. இந்த விபத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்தும் வேண்டும் சுக்கு நூறாக நொறுங்கியதில்., அங்குசாமி., அவரது மனைவி லட்சுமி., உமாபதி மற்றும் விஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த 24 பேரும்., வேனில் பயணம் செய்த 4 பேரும் படுகாயமடைந்த நிலையில்., உயிருக்கு போராடி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கும்., தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது.
English Summary
in vilupuram accident bus and van 4 peoples died and 24 peoples injured