12 வயது சிறுமி மதுபானங்களை விற்பனை செய்த அவலம்.! சிறுமியின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்துபோன காவல் துறையினர்.!!
in vilupuram a girl sell drinks due to her father Coercion
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 ம் வகுப்பில் 12 வயதுடைய மாணவி பயின்று வருகிறார்.
இவர் சம்பவத்தன்று பள்ளி சீருடையுடன் கையில் ஒரு பையை வைத்து கொண்டு வீதிவீதியாக சென்று வருகிறார்.
இவரை கண்டதும் அங்குள்ள மதுபிரியர்கள் வேகமாக வருகை தந்து., தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். மதுபானங்களை வாங்குவதற்கு போட்டி போட்டுகொண்டு பல மதுபானங்களை வாங்கி செல்லும் வழக்கத்தை வைத்துள்ளனர்.
இதனை கண்ட சிலர் தங்களின் அலைபேசியில் இதனை காட்சிகளாக பதிவு செய்து இணையத்தில் பதிவிடவே., இந்த காட்சிகளானது இணையத்தில் பெரும் வைரலாகியது. இந்த காட்சிகள் வைரலாகியதை தொடர்ந்து இந்த காட்சிகளை விழுப்புரம் மாவட்டத்தின் காவல் ஆய்வாளரும் கண்டுள்ளனர்.
இது குறித்த காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் அதிகாரிகள்., உடனடியாக இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். இதனை ஏற்று இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில்., மதுபானங்களை விற்பனை செய்யும் மாணவி அங்குள்ள கிராமப்பகுதியை சார்ந்தவர் என்பதும்., அவருடைய தந்தையே மது பானங்களை வழங்கி விற்பனை செய்து வர கூறி வழங்கியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., உடனடியாக சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாது பள்ளிக்கு செல்லும் சிறுமியிடம் மது பானங்களை வழங்கி விற்பனை செய்ய சொன்ன சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
English Summary
in vilupuram a girl sell drinks due to her father Coercion