கட்டிடமே நடுங்கிப்போன அலறல்.! உயிருக்கு இறுதியாக துடிதுடித்த சோகம்.!! பதறிப்போன உறவினர்கள்.!!
in vellore a pregnant lady died in govt hospital after delivery a cute baby
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டிற்கு அடுத்தபடியாக உள்ள கிராமம் மேல்விஷாரம். இந்த பகுதியை சார்ந்தவர் ஹலீல்., நான்கு சக்கர ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ஷம்மா (32).
நிறை மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து., அடுக்கம்பாறையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்துக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில்., இவருக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்த பின்னர்., திடீரென ஷம்மாவிற்கு உடல் நலமானது மோசமடைய துவங்கியது. இது குறித்து விபரம் அறிந்த குடும்பத்தினர்., அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில்., அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் கதறியளவே., மருத்துவர்களிடம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்று கூறியும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்ததன் காரணமாக அவர் இறந்துவிட்டார்.
இதனால் அவரது இறப்பிற்கு மருத்துவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்., இதனை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரையவே., போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் சமாதானமடைந்து சென்றனர்.
English Summary
in vellore a pregnant lady died in govt hospital after delivery a cute baby