கணவனின் கள்ளகாதால் விவகாரத்தால்., மனதை கல்லாக்கி 3 வயது மற்றும் 7 மாத குழந்தைக்கு தாய் செய்த காரியம்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்துள்ள சந்திரபுரம் கே.கே.கொட்டாவூர் பகுதியை சார்ந்தவர் ஜெயக்குமார். இவர் விவசாயியாக பணி செய்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் மேனகா (21). இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. 

இவர்கள் இருவருக்கும் யமுனா என்ற மூன்று வயதுடைய குழந்தையும்., கோவினேஷ் என்ற 7 மாதமுடைய மகனும் உள்ளனர். ஜெய்குமாருக்கும் அதே பகுதியை சார்ந்த மற்றொரு பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த தகவலானது மேனகாவிற்கு தெரியவரவே., இது குறித்து கணவர் ஜெயக்குமாரை கண்டித்துள்ளார். 

இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில நேரங்களில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில்., கடும் மன உளைச்சலுக்கும் உள்ளான மேனகா., தனது குழந்தைகளுக்கு விஷம் வழங்கி தானும் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார். 

இவர்கள் அனைவரும் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து., பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore a mother killed her baby and attempt suicide for her husband illegal affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->