திருமணம் முடியாத நபருடன் கள்ளக்காதல் உல்லாசம்.! எதிர்காலத்தை கூறி ஆலோசனை வழங்கியும்., கள்ளக்காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு.!!
in vellore a illegal affair couple attempt suicide and died
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரம் சைதாப்பேட்டையை சார்ந்தவர் சரவணன் (வயது 23). அதே பகுதியில் திருமணம் முடிந்த 40 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு வட்டாரத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
40 வயதுடைய பெண்ணிற்கு திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்., சரவணனுக்கு அந்த பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இவர்கள் கள்ளக்காதல் உறவை அறிந்த கொண்ட உறவினர்கள்., இருவரையும் அழைத்து கண்டித்து பிரிந்து செல்லக்கூறி முறையிட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கள்ளகாதலில் முக்கியமாக இருந்ததால், பிரிய மனமில்லாது கடந்த 2017 ம் வருடத்தில் ஈரோட்டில் வீடெடுத்து தங்கி வந்தனர்.
மேலும்., அங்கேயே கிடைக்கும் கூலி வேலையை செய்து நாட்களை கடத்தி வந்த இவர்களின் இல்லத்தை உறவினர்கள் எப்படியோ அறிந்து கொண்டனர். இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக ஈரோட்டிற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
சரவணன் திருமணம் முடியாத நபர்., உனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் எதிர்காலமானது பெரிய கேள்விக்குறிக்கு சென்றுவிடும்., இதே நிலை இன்னும் தொடர்ந்தால் அவர்களின் எதிர்காலத்திற்கு என்ன செய்வது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் அறிவுரையை வழங்கியும் கேக்காது., பிரிய மனமில்லாமல் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்த சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் பரிதாபமாக பலியான இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in vellore a illegal affair couple attempt suicide and died