வேலூரில் குழந்தையை கள்ளக்காதலுக்கு பலியாக்கிய தாய்.! கூறிய அதிர்ச்சி தகவலை கேட்டு அதிர்ந்து போன காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் இருக்கும் நேதாஜி நகரை சார்ந்தவர் நளினி. கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பெங்களூரை சந்தவர் சிவகுமார். சிவகுமாருக்கும் நளினிக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. 

இவர்கள் இருவருக்கும் மூன்று வயதுடைய ரித்திகா என்ற குழந்தை இருக்கும் நிலையில்., கடந்த ஒன்றரை வருடமாக பெங்களூரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்., சென்னையை சார்ந்த முரளி என்பவருக்கும் நளினிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த பழக்கமானது சிவகுமாருக்கு தெரிய வந்துள்ளது.

இதனை அறிந்த சிவகுமார் தனது மனைவியை கண்டித்துள்ளார்., இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து ஒரு நாள் வழக்கம் போல தகராறு ஏற்பட்டதன் காரணமாக., தனது குழந்தையுடன் வாணியம்பாடிக்கு வந்துள்ளார். இந்நிலையில்., நேற்று நளினியின் கள்ளக்காதலன் முரளி வந்த நிலையில்., நளினி கடைக்கு சென்றுள்ளார். கடைக்கு சென்று இல்லத்திற்கு திரும்பிய சமயத்தில்., குழந்தை ரித்திகா தீக்காயத்துடன் உயிருக்கு போராடி துடித்தது.

இதனையடுத்து குழந்தையை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சமயத்தில்., வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த முதற்கட்ட விசாரணையில்., இவர்கள் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில்., கள்ளகாதலுக்கு குழந்தை இடையூறாக இருந்த காரணத்தால்., குழந்தை முரளியால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதனை அறிந்த காவல் துறையினர் முரளியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்., மேலும்., குழந்தைக்கு பாலியல் ரீதியிலான தொல்லை ஏதேனும் அளித்து கொலை செய்தானா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த தகவலானது ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில்., விசாரணையில் வெளியான முழு காரணத்தை கேட்டு காவல் துறையினர் அதிர்ச்சியாகினர். அந்த தகவலில் இரண்டாம் திருமணத்திற்கு குழந்தை தடையாக இருந்ததால் குழந்தையை தாய் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அந்த விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாவது., 

பாஸ்கரன் வெளியூரில் கட்டிட பணியாற்றி வந்த சமயத்தில் முரளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது காதலாக மாறவே., இதனை அறிந்த பாஸ்கரன் என்னை கண்டித்தார். இதனையடுத்து இரண்டு மகன்களை முரளியுடன் விட்டுவிட்டு., மகளை என்னுடன் அழைத்து வந்தேன். குழந்தைக்கு தீயை வைத்து விட்டு பின்னர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். 

மருத்துவமனையில் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்ததில் குழந்தை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும்., குழந்தையின் தீக்காயங்கள் குறித்து மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் தெரிவிக்காத பட்சத்தில்., காவல் துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். பாஸ்கருடன் சட்டபூர்வ விவாகரத்து கிடைக்காத பட்சத்தில் குழந்தையை கொலை செய்து முரளியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்து குழந்தையை கொலை செய்தோம் என்று தெரிவித்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore a child murdered by her mother case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->