திருத்தணி மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்.! ஒருதலை காதல் கொடூரத்தால் அரங்கேறிய கொலைகள்.!!  - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியை சார்ந்தவர் வனப்பெருமாள் (வயது 50). இவர் அங்குள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் வீரலட்சுமி (வயது 45). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவர்கள் இருவருக்கும் பவித்ரா என்ற 25 வயதுடைய மகளும்., போதிராஜா என்ற 10 வயதுடைய மகனும் உள்ளனர். 

பவித்ராவுக்கு திருமணம் முடிந்த நிலையில்., அவர் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர்களின் மகனான போதிராஜா 5 ம் வகுப்பு பயின்று வருகிறார். வனப்பெருமாள் கடந்த 9 ம் தேதி இரவு வேலைக்கு சென்றுவிட்ட நிலையில்., பணியை முடித்துவிட்டு இல்லத்திற்கு வனப்பெருமாள் திரும்பிய சமயத்தில் வரலட்சுமி இரத்த வெள்ளத்தில் இறந்தும்., மகன் போதிராஜா இறந்தும் கிடந்துள்ளார். 

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர்., உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., இவர்களை கொலை செய்த கும்பல்., பின்னர் பீரோவில் இருந்த 21 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது. 

இந்த கொலையை செய்த கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில்., கொலை செய்யப்பட்ட விஜியின் நகத்தில் இரத்த துளிகள் இருந்துள்ளது. இதனை கண்ட மருத்துவர்கள் செய்த சோதனையில் கொலையானவர்களின் இரத்தத்துடன் ஒத்துப்போகவில்லை. இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியதில் வீட்டின் அருகே வசித்து வரும் வெங்கட் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவரது இரத்த மாதிரியை எடுத்து செய்த சோதனையில் விஜியின் நகத்தில் இருந்த இரத்தத்துடன் ஒத்துள்ளது. 

அந்த விசாரணையில்., வெங்கடிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் திருமண செலவிற்காக நகை மற்றும் பணங்களை கொள்ளையடிக்க சென்ற சமயத்தில் கொலை செய்ததும்., வெங்கட்டிடம் இருந்து தப்பிப்பதற்கு விஜி கழுத்தில் கை வைத்து அழுத்திய சமயத்தில் வெங்கட்டின் இரத்தம் விஜியின் நகத்தில் பதிவானதும் தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டு வந்த நிலையில்., குற்றவாளி அளித்த வாக்குமூலத்தை கேட்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். 

இவர்களின் இல்லத்திற்கு அருகில் வசித்து வரும் சத்தியராஜின் மகன் வெங்கட் என்கிற கண்ணதாசன் (வயது 27) என்பது., வெங்கட்டிற்கு இருந்த ரூ.3 இலட்சம் கடனை அடைக்க கொள்ளையடிக்க சென்றதும்., இதுமட்டுமல்லாது வனப்பெருமாளின் மகளை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில்., அவருக்கு வேறொருவருடன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்த்து கொலை செய்ய முடிவு செய்தோம். 

அதன்படி சம்பவத்தன்று வீரலட்சுமியின் கழுத்தில் இருந்து நகைகளை பரிதத்தை அடுத்து அவரின் சத்தம் கேட்டு போத்திராஜ் ஓடி வரவே., அவரின் கழுத்தை அரிவாளால் வெட்டி பின்னர் போத்திராஜின் கழுத்தில் அயன் பாக்சின் வயரை வைத்து நெரித்து கொலை செய்தோம் என்று தெரிவித்தார். இந்த கொலை சம்பவத்தில் பொன்பாடி பகுதியில் இருக்கும் மேட்டுதெருவை சார்ந்த சுப்பிரமணி மகன் உமாபதி (வயது 31)., அரக்கோணத்தில் உள்ள கீழாந்துார் பகுதியை சார்ந்த சண்முகத்தின் மகன் சுரேஷ் (வயது 30) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruthani mother and son killed case her daughter one side love police shocked


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->