வீட்டில் இருந்த மனைவியை இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க விட்ட கணவன்., கதறியழுத குழந்தைகள்.! வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் செந்தூரன் காலனியை சார்ந்தவர் முருகசாமி (38). இவரது மனைவியின் பெயர் மீராயாஸ்மின் (வயது 32). இவர்கள் இருவருக்கும் கிஷோர் என்ற 12 வயதுடைய மகனும்., பிரசன்னா என்கிற 7 வயதுடைய மகனும் உள்ளனர். முருகசாமியும் - மீராவும் அங்குள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். 

இவர்களின் மகன்கள் இருவரும் தர்மரபுவை இருக்கும் முருகசாமியின் தந்தையின் இல்லத்தில் தங்கி பயின்று வருகின்றனர். முருகசாமிக்கும் - மீராவிற்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. அடிக்கடி இவர்களுக்குள் குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தாலும்., இருவரும் பணிக்கு சென்று திரும்புவது வழக்கம். இந்நிலையில்., ஏற்பட்ட குடும்ப தகராறில் இருவரும் பணிக்கு செல்லாமல் இருந்துள்ளனர். 

அந்த சமயத்தில் இவ்ரகளுக்குள் மீண்டும் வாக்குவாதம் துவங்கவே., கடுமையான ஆத்திரமடைந்த முருகசாமி கத்தியை கொண்டு மீராவை சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த அவர் அலறவே., அக்கம் பக்கத்தினர் விரைந்தனர். அக்கம் பக்கத்தினர் வருவதை கண்ட முருகசாமி உடனடியாக சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். 

படுகாயமடைந்த மீராவை கண்டு அதிர்ந்து போன அக்கம்பக்கத்தினர்., உடனடியாக சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும்., அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அவசர ஊர்தி விரைவதற்குள் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும்., காவல் துறையினர் செய்த சோதனையில்., மீராவின் தலை மற்றும் வயிற்று பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டு., இரத்தம் அதிகளவில் வெளியேறி இறந்தது தெரியவந்தது. இந்த விஷயம் குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த சமயத்தில் பல்லடத்திற்கு அருகில் இருக்கும் சின்னக்கரை பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்க்காக நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

இதனை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து முருகசாமியை கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு முருகசாமியை கைது செய்து அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., மீரா பணியாற்றும் நிறுவனத்தில் அனைத்து ஆண்களுடன் பேசுவது குறித்து முருகசாமி கண்டித்துள்ளார். 

சம்பவத்தன்று வீட்டில் இருவரும் பணிக்கு செல்லாமல் இருந்த நிலையில்., எழுந்த சந்தேகத்தில் ஆத்திரம் தலைக்கேறி., தகராறு ஏற்பட்டு அரிவாள்மனை மற்றும் கட்டையால் தாக்கிவிட்டு., கத்தியால் குத்தி சம்பவ இடத்தை விட்டு தப்பியோடியுள்ளார். மீராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் முருகசாமியின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும்., சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மீராவின் இரண்டு குழந்தைகளும் தாயாரின் உடலை கட்டியணைத்து அழுத சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thirupur a girl killed by her husband due to Doubts


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->