திருப்போரூர் மாணவி பாலியல் வன்கொடுமை., கொலை வழக்கு.! செங்கல்பட்டு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருபோரூரை அடுத்துள்ள ஆலத்தூரை சார்ந்த 13 வயதுடைய சிறுமி வசித்து வந்தார். இவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் கடந்த 2017 ம் வருடத்தில் வீட்டில் தனிமையில் இருந்தார். 

மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் வெளியே செல்ல வீட்டில் தனிமையில் இருந்த மாணவியை., அதே பகுதியை சந்த அசோக் (வயது 24) என்ற வாலிபர் மாணவியை பலவந்தப்படுத்தி கொடூர முறையில் பலாத்காரம் செய்துள்ளார். மேலும்., மாணவியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். 

வெளியே சென்ற பெற்றோர் மாலையில் வீட்டிற்கு திரும்பிய சமயத்தில் மாணவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு., ஆடைகள் அலங்கோலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். சம்பவ இடத்தில் இருந்த கத்தி மற்றும் அசோக்கின் ஆடை மற்றும் காலனியை காவல் துறையினர் கைப்பற்றினர். இதனையடுத்து அவரை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்தது குறித்து ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு மகளீர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையானது., நேற்று நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி அசோக் குமாருக்கு தூக்குதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 

இது குறித்து அவர் தெரிவித்ததாவது., மாணவியை கொலை செய்த குற்றத்துக்காக தூக்குத்தண்டனையும்., கற்பழிப்பு செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த வழக்கை அரசு வழக்கறிஞர் ஸ்ரீசீதா தேவி வாதாடி வெற்றியடைந்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruporur 13 years old girl rape case judge sign to death for a man


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->