கணவன் கூறிய அந்த ஒரு வார்த்தையால் உயிரை துட்சமாக நினைத்து பெண் செய்த காரியம்.! பரிதாபமாக பலியான பிஞ்சு குழந்தை.!!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியை சார்ந்தவர் பல்லவராஜன். இவரது மனைவியின் பெயர் பிரியங்கா. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில்., திருமணம் முடிந்த காலத்தில் இருந்தே இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில் இவர்களுக்குள் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து., தனது 15 மாதமே ஆன குழந்தையுடன் தனது தாயாரின் இல்லத்தில் பிரியங்கா வசித்து வருகிறார். 

இவர்கள் இருவரிடமும் பேசி எவ்வாறாவது இவர்களை சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று பெற்றோர்கள் பல முயற்சிகளை எடுத்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில்., பல்லவராஜன் நீதிமன்றத்தில் விவாகரத்து கூறி வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரியங்கா மற்றும் அவரின் பெற்றோர்கள் பல்லவராஜனுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி பேசி தீர்க்க முடிவு செய்துள்ளனர். அந்த சமயத்தில் அவரது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தும்., ஆத்திரத்தில் அவதூறாகவும் பேசியுள்ளார். இந்த தகவலை கேட்டு கடும் மன உளைச்சலில் இருந்து வந்த பிரியங்கா செய்வதறியாது திகைத்துள்ளார். 

இதனால் மனமுடைந்த பிரியங்கா அங்குள்ள முருகன் கோவிலுக்கு சென்று குழந்தைக்கு விஷத்தை வழங்கி., தானும் விஷத்தை அருந்தி மயக்கமடைந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குழந்தையையும்., பிரியங்காவையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து., உயிருக்கு போராடிய பிரியங்காவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni girl attempt suicide with her baby due to family problem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->