முதல் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில்., காதல் கரம் பிடித்த மற்றொரு மனைவி ரோட்டில்.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் இருக்கும் தர்மாபுரியை சார்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவியின் பெயர் சாந்தி. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து சில வருடங்கள் ஆகும் நிலையில்., இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

ராஜேஷ் அதே பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். அதே தொழிற்சாலையில்., திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் நிலக்கோட்டை அருகேயுள்ள தும்மலப்பட்டியை சார்ந்த வித்யா (21) என்ற பெண் பணியாற்றி வந்துள்ளார். 

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. மேலும்., வித்யாவிடம் தனக்கு திருமணம் நடந்துள்ளதையும்., குழந்தைகள் உள்ளத்தையும் மறைத்து காதலித்து வந்துள்ளார். 

இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்து வந்துள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதை ஏற்கனவே மறைத்த ராஜேஷ்., அவரிடம் திருமண ஆசை காட்டி., திருமணம் செய்து கொண்டு ஊருக்கு வந்துள்ளார்.

தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் மணக்கோலத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி., ராஜேஷை கண்டிக்கவே தகராறு நடந்துள்ளது. மேலும்., இதனை வித்யாவும் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்., இருவரும் சேர்ந்து வாழ வேண்டும்., இல்லையேல் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வித்யா விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni a husband married another girl without divorce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->