திருமணமாகி இரு வாரங்களில் கட்டிய மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்!. அதிர்ச்சி சம்பவம்!. - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செட்டிமூலையைச் சேர்ந்த. விவசாய கூலி தொழிலாளியான வீரசாமி -  நீலாவதி என்ற தம்பதியினருக்கு 24 வயது நிரம்பிய மகள் ஒருவர் இருந்தார்.

இந்நிலையில் வீரசாமி தன்னுடைய மகளை திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு கடந்த மதம்  25-ஆம் தேதி அன்று திருமணம் செய்து வைத்துள்ளார்.

பின்னர் நேற்று பிறந்த வீட்டில் விருந்து முடிந்து, வீரசாமியின் மகள் புகுந்த வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது மனைவியின்  நகையை வாங்கி  அடகு வைத்து அந்த பணத்தில் ராஜா மது அருந்தியுள்ளார். பின்னர் இரவு 11 மணிக்கு மனைவியை, அருகிலிருக்கும் தன்னுடைய நண்பர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கேயே விட்டு விட்டு வந்துள்ளார் ராஜா.

          

ராஜாவின் நண்பர்கள் அவரது மனைவியை பாலியியல் கொடுமை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து 2 மணிக்கு சோகத்துடன் வீடு திரும்பிய அவரது மனைவியை, ராஜா கண்மூடித்தனமாக அடித்து கொடுமை படுத்தியுள்ளார்.

இந்த தகவல் வீராசாமி  வீட்டிற்கு தெரியவந்ததால், அவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர், பின்பு தலைமறைவாக உள்ள ராஜா மற்றும் அவரது நண்பர்களை பொலிசார் தேடி வருகின்றனர். திருமணமாகி சில நாட்களிலேயே இவ்வாறு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In the two weeks after marriage, the husband left his wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->