தனுஷ்கோடியில்., கண்களுக்கு விருந்தளிக்கும் பிளாங்கோ பறவைகளுக்கு நேரும் துயரம்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in thanushkodi flamingo bird are hunting by a gang
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்திற்கு சுமார் 25 கி.மீ தொலைவில் அமைத்துள்ளது தனுஷ்கோடி. இங்குள்ள பாலம் மற்றும் கம்பிப்பாடு பகுதிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன்பிடித்தொழிலை மேற்கொண்டு வசித்து வருகின்றனர். இராமேஸ்வரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள்., புயலால் சிதைந்த தனுஷ்கோடியை சென்று பார்த்து விட்டு வருவது வழக்கம்.
இந்த கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான கடற்புறாக்கள் வசித்து வரும் நிலையில்., அங்குள்ள கடற் பகுதியில் இருக்கும் மணற்திட்டுகளில் வசித்து வருகின்றன. இந்த கடற்புறாக்கள் பகல் வேளைகளில் மீன்களை பிடித்து வேட்டையாடி., பின்னர் மாலை வேளைகளில் ஓய்வெடுப்பதற்க்காக எம்.ஆர்.சத்திரம் பகுதி முதல் அரிச்சல்முனை பகுதிகள் வரை அமர்ந்திருக்கும்.
அங்குள்ள மீனவர்கள் மீன்களை பிடித்துக்கொண்டு கரைகளுக்கு வருகை தரும் சமயத்தில் அதிகளவில் கடற்புறாக்கள் கரையில் விழும் மீன்களை உண்ணுவதற்க்காக அலைமோதி மீனவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும். வருடம் தோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் இனப்பெருக்கத்திற்க்காக பிளாங்கோ வகை பறவைகளும் இந்த இடத்தில் சந்திக்கிறது.
பிளாங்கோ பறவைகளை போலவே., கடல் காவா மற்றும் நீர்காகம் போன்ற பல பறவைகளுடன் இறை தேடி வந்து செல்லும் காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு கழித்து செல்லும் வேளையில்., இதனை பணத்திற்காக மர்ம நபர்கள் வேட்டையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., இதன் காரணமாக பிளாங்கோ பறவைகள் பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதால் பின்னாளில் பிளாங்கோ பறவைகளின் வருகை குறையும் என்று அஞ்சப்படுகிறது.
இதனை காவல் துறையினர் மற்றும் பறவைகள் நல அமைப்புகள் சேர்ந்து பறவைகளை வேட்டையாடி வரும் மர்ம நபர்களை கண்கானித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
in thanushkodi flamingo bird are hunting by a gang