சேலம் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.!!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரியானது செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் கென்யா நாட்டை சார்ந்த எரிக் என்ற 27 வயதுடைய மாணவர்., கடந்த 2016 ம் வருடத்தில் பயின்று வந்தார். 

கென்யா நாட்டை சார்ந்த 22 வயதுடைய பெண்ணும்., இதே கல்லூரியில் பயின்று வந்தார். அந்த சமயத்தில்., மாணவி அங்குள்ள அதிகரிப்பட்டி கிராமத்தில் வீடெடுத்து கல்லூரிக்கு சென்று தங்கி வந்து பயின்று சென்றுள்ளார். இவர்கள் இருவரும் ஒரே நாட்டை சார்ந்தவர்கள் என்பதால்., நட்பு வட்டாரத்துடன் பழகி வந்துள்ளனர். 

இந்த சூழ்நிலையில்., மாணவியின் இல்லத்தை அறிந்து வைத்திருந்த எரிக்., இரவு நேரத்தில் மாணவியின் இல்லத்திற்கு சென்று வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த விஷயம் குறித்து பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., எரிக்கை கைது செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். 

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., வழக்கறிஞர் மூலமாக ஜாமின் மனுதாக்கல் செய்ததையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த சூழ்நிலையில்., நேற்று தனது தீர்ப்பை நீதிபதி வழங்கினார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில்., இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எரிக்கிற்க்கு 14 வருட சிறை தண்டனை அறிவித்து உத்தரவிட்டார். இதனையடுத்து எரிக் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam Kenya girl rapped by Kenya boy court announce judgement to jail


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->