திருமணம் முடிந்தும் மாறாத கள்ளக்காதல் மோகம்.! கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவை அறியாத கள்ளக்காதலி., ஐஸ்கீரிம் கடையில் அரங்கேறிய கொடூரம்.!!  - Seithipunal
Seithipunal


சேலம் நகரில் உள்ள இரயில் நிலையம் செல்வதற்கு உறிய சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருபவர் பாண்டியராஜன். இவருக்கு சொந்தமாக ஐஸ்க்ரீம் கடை உள்ளதால்., அதனை நடத்தி மேற்பார்வை செய்து வந்தார். இந்த கடையில்., கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக ஆசாத் நகர் பகுதியை சார்ந்த ஷீரன் சித்தாரா என்பவர் பணியாற்றி வந்தார். 

அவ்வப்போது வெளியூர் பயணத்திற்கு சென்று வரும் பாண்டியராஜன்., வெளியூருக்கு செல்லும் நேரத்தில் கடையை பார்த்துக்கொள்ள கூறி ஷீரனிடம் கடையின் சாவியை வழங்கி செல்வது வழக்கம். உரிமையாளர் இல்லாத நேரத்தில்., கடைக்கு வந்து கடையை ஷீரன் கவனித்து வந்து சென்றுள்ளார். இந்நிலையில்., நேற்று பணிசூழல் காரணமாக வெளியே சென்ற பாண்டியராஜன் காலையில் கடைக்கு வருகை தந்துள்ளார். 

அந்த சமயத்தில் கடை திறக்காமல்., ஷட்டர் மட்டும் அடைக்கப்பட்டு உள்தாளிட்டு இருந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினரை அழைத்து ஷட்டரை திறக்க முயற்சி செய்ததும் பலனளிக்காததால்., சந்தேகமடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஷட்டரை உடைத்து கதவை திறந்தனர். 

கதவை திறந்ததும் கடையில் பணியாற்றிய ஷீரன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில்., அவரின் அருகேயே சுமார் 54 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் செய்வதறியாது திகைக்கவே., இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., திருமணம் முடிந்து கணவரை பிரித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் ஷீரனுக்கு., அதே பகுதியை சார்ந்த இனாமுல்லா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த பழக்கத்தை அறிந்த உறவினர்கள் இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளனர். 

இதன் காரணாமாக சம்பவத்தன்று ஷீரனின் கடைக்கு வந்த முல்லா., இது குறித்து பேச்சு வார்த்தை நடத்திய சமயத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்த முல்லா., கத்தியால் ஷீரனை கழுத்தை அறுத்து கொலை செய்து அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. 

இந்த தகவலை அடுத்து., சம்பவ இடத்தில இருந்து ஒன்பதும் பக்கம் எழுதப்பட்டு இருந்த கடிதம் ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றியதில்., முல்லா அந்த கடிதத்தை எழுதியிருப்பது தெரியவந்தது. அதில் இந்த கொலைக்கும் தகொலைக்கும் நானே பொறுப்பு என்று எழுதியிருந்தார். இதனையடுத்து இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam illegal affair couple attempt suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->