மூன்று மனைவிகள் கட்டியும் தீராத ஆசை.! இரண்டு பேரை அந்த முறையில் கொடூர கொலை செய்த கணவன்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகேயுள்ள பெத்தாம்பட்டியை சார்ந்தவர் சிங்காரம் (65). இவர் அங்குள்ள பண்ணையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவருக்கு இவரது மனைவியின் மீது சந்தேக குணம் இருந்துள்ளது., இதனால் தகராறில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 

இந்நிலையில்., சிங்காரம் இரண்டாம் திருமணம் செய்ய முடிவு செய்து., வெள்ளையம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ள நிலையில்., வழக்கம் போல வெள்ளையம்மாளையும் சந்தேக குணத்துடன் பார்த்து வந்துள்ளார். இதனால் கொடுமை தாங்க முடியாத வெள்ளையம்மாள் சில வருடத்திற்கு முன்னர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். 

வெள்ளையம்மாள் இறந்த பின்னர்., சுமதி என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து., இவர்களுக்கு தங்கம்., வேலு மற்றும் சக்தி என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். சுமதி வீட்டிலேயே பசுமாடுகளை வளர்த்து வந்த நிலையில்., தினமும் பால் கறந்து அக்கம் பக்கத்தில் வசிக்கும் நபர்களுக்கு விற்பனை சேட்டு வந்துள்ளார். 

அவ்வாறு பால் விற்பனை செய்து வரும் வருமானத்தை வைத்து குழந்தைகளின் படிப்பு செலவிற்கு உபயோகப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்., வழக்கம்போல சிங்காரம் சந்தேகம் அடைந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அறிந்த ஊர் மக்கள் சிங்காரத்தை சமாதானம் செய்து அதனை கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில்., நேற்று இரவு மீண்டும் சண்டை துவங்கவே., சுமதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனால் விடிவிடிய தூங்காமல் காத்திருந்து., அதிகாலையில் மாடுகளிடம் பால் கறக்க வந்த சுமதியின் தலையில் செங்கலை போட்டு உள்ளார். இதனால் நிலை குலைந்த சுமதி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிருக்கு போராடி துடித்தார். 

அவருக்கு அருகே சென்று அங்கிருந்த சம்பட்டியை வைத்து கொடூர முறையில் அடித்தே கொலை செய்துள்ளார். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். காலையில் சுமதியின் தாயார் மகளை காண வந்த சமயத்தில்., மகள் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்தனர். 

இந்த தகவலானது ஊர் முழுவதும் தெரியவே., சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சுமதியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

 

இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கிய காவல் துறையினர்., இவரின் வாழ்க்கையில் மூன்று மனைவிகள் இருந்ததும்., அவர்களில் முதல் மனைவியை தவிர யாரும் உயிரோடு இல்லை என்பதை அறிந்து முதல் மனைவியை தேடி வருகின்றனர். மேலும்., தற்கொலை செய்த பிற மனைவிகள் அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? என்ற விசாரணையும்., சிங்காரத்தை தேடும் பணியிலும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam a husband killed her 3 wife due to Doubts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->