65 வயதில் பக்கத்து வீட்டு பாட்டியுடன் உல்லாசமாக இருந்த கணவனை கண்டு கொண்ட மனைவிக்கு நேர்ந்த துயரம்.!!
in selam a grand ma killed by her husband due to her husband illegal affair
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் உள்ள பாலிக்கடை கிராமத்தை சார்ந்தவர் சின்னப்பையன் (வயது 65). இவரது மனைவியின் பெயர் லட்சுமி. இவர்களின் இல்லத்திற்கு அருகில் 60 வயதுடைய பச்சியம்மாள் என்ற பெண் வசித்து வருகிறார்.
பச்சியம்மாளுக்கும் சின்னபையனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் பல முறை தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., இவர்களின் உல்லாச வாழ்க்கையை லட்சுமி நேரில் கண்டுகொண்டதை அடுத்து., இருவரிடமும் சண்டையிட்டு பஞ்சாயத்தை கூட்டப்போவதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இருவரும் லட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி., லட்சுமியை கொலை செய்து., காவல் துறையினர் மற்றும் ஊர் பஞ்சாயத்தில் இருந்து தப்பிப்பதற்கு கொள்ளை நாடகம் ஆடி ஊர் மக்களை நம்பவைத்துள்ளனர். இதனையடுத்து இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
அந்த விசாரணையில்., சின்னப்பையன் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே., இவரின் மீது சந்தேகமடைந்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மேற்கொண்ட தகவலானது வெளியாகியுள்ளது.
இதனையடுத்து சின்னப்பையன் மற்றும் பச்சையம்மாளை கைது செய்த காவல் துறையினர்., இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும்., அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in selam a grand ma killed by her husband due to her husband illegal affair