உன் மனைவி உனக்கு மட்டுமா மனைவி.! நண்பனின் மனைவியிடம் தகாத பழக்கத்தை வைத்திருந்த நண்பனுக்கு காத்திருந்த சோகம்.!!
in selam a friend killed by her friend due to illegal affair with his friend wife
சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூருக்கு அடுத்துள்ள மூலக்காடு விராலிக்காடு பகுதியை சார்ந்தவர் ரவி (வயது 45). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்த நிலையில்., இவருக்கும் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடானது இருந்து வந்துள்ளது.
இவர்களின் கருத்து வேறுபாடு தகராறில் முற்றவே., கணவனை பிரிந்து மனைவி தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில்., இவர்கள் ஒன்றாக இருந்த சமயத்தில் நாச்சிமுத்தின் இல்லத்திற்கு ரவி வந்து செல்வது வழக்கம்.
அந்த வகையில்., அடிக்கடி வந்து செல்லும் ரவியுடன் நாச்சிமுத்தின் மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே மலர்ந்து பழக்கமானது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., இந்த பழக்கத்தை நாச்சிமுத்து அறிந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரையும் கடுமையாக கண்டித்த நாச்சிமுத்து பழக்கத்தை கைவிடக்கூறி வற்புறுத்தியுள்ளார்.
இவர்கள் தங்களின் கள்ளக்காதல் பழக்கத்தை கைவிட மறுத்ததை அடுத்து., ஆத்திரமடைந்த நாச்சிமுத்து இரவு வேளையில் உறங்கிக்கொண்டு இருந்த ரவியை இரும்பு கம்பியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே துடித்து உயிரிழந்தார்.
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து., ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., ரவியை கைது செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in selam a friend killed by her friend due to illegal affair with his friend wife