குடும்பத்துடன் தற்கொலை முடிவு., உயிருக்கு போராடிய மூத்த மகள்.! கடிதத்தில் இருந்த தகவலை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகிய காவல் துறையினர்.!!
in selam a family member died due to loan process
சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியை சார்ந்தவர் விஜயகுமார் (வயது 60). இவரது மனைவியின் பெயர் அனுராதா (வயது 50). இவர்கள் இருவருக்கும் ஆர்த்தி என்னும் 22 வயதுடைய மகளும்., ஆஷிகா என்னும் 20 வயதுடைய மகளும் உள்ளனர்.
இவர்கள் நால்வரும் சேலத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் உள்ள விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில்., இவர்கள் விடுதியறை கதவானது நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் உள்தாழிட்டு இருந்துள்ளது.
கதவை நீண்ட நேரம் தட்டியும் இவர்களின் குரல் கூட எழும்பாத நிலையில்., கதவை திறந்து உள்ளே சென்று ஊழியர்கள் சோதித்த போது விஜயகுமார்., அனுராதா., ஆஷிகா ஆகியோர் பிணமாக இருந்துள்ளனர்., இவர்களின் மூத்த மகள் உயிருக்கு போராடியவாறு இருந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இவர்கள் காவல் துறையினருக்கும் அவசர ஊர்திக்கும் தகவலை தெரிவித்தனர். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்தியினர் உயிருக்கு போராடிய ஆர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்., உயிரிழந்து கிடந்த மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் அங்கிருந்த குளிர்பான பாட்டிலை சோதனை செய்ததில் விஷம் கலந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கிருந்த கடிதத்தையும் கைப்பற்றிய காவல் துறையினர் அந்த காகிதத்தை படித்த சமயத்தில்., கடன் தொல்லை தாங்க முடியாத காரணத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டோம் என்ற தகவலானது இருந்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த குடும்பத்தார்கள் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும்., சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in selam a family member died due to loan process