கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை எண்ணம்.! மகனை மட்டும் விட்டுவிட்டு மகளுடன் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.!! கண்ணீரில் கிராமம்.!!   - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள பூலாவாரியை அடுத்துள்ள ஆத்துக்காடு பகுதியை சார்ந்தவர் ரவிக்குமார் (43). இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சாந்தி (வயது 35). இவர்கள் இருவருக்கும் ரம்யாலோஷினி என்ற 17 வயதுடைய மகளும்., தீனதயாளன் என்ற 17 வயதுடைய மகனும் உள்ளனர். 

ரம்யா அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.ஸ்.சி. இரண்டாம் வருடம் பயின்று வரும் நிலையில்., தீனதயாளன் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். தீனதயாளன் நேற்று இரவு உறங்குவதற்காக தனது பாட்டியின் இல்லத்திற்கு சென்றுள்ளார். இரவு பாட்டியின் இல்லத்தில் உறங்கிவிட்டு பின்னர் காலையில் தனது இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். 

காலையில் நீண்ட நேரம் ஆகியும் பெற்றோர் மற்றும் சகோதரி கதவை திறக்கலாலும்., கதவை தட்டியதற்கு எந்த விதமான சத்தமும் வழங்காமல் இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவிக்கவே., அதிர்ச்சியடைந்த அவர்கள் கதவை தட்டி பார்த்து விட்டு., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த சமயத்தில்., ராஜ்குமார் சேலையில் தூக்கிட்டு பிணமாகவும்., சாந்தி மற்றும் ரம்யா நைலான் கயிறில் பிணமாகவும் தொங்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் அவர்களின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இந்த செய்தியானது அப்பகுதி மக்களுக்கு தெரியவரவே., அனைவரும் இல்லத்திற்கு வந்து இவர்களின் உடலை கண்டு கதறியழுதனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில் கடன் தொல்லையால் இவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. 

இதனையயடுத்து காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பெற்றோர் மற்றும் சகோதரியை இழந்த துக்கத்தில் இருந்து தீனதயாளன் மீண்டு வர இயலாமல் இருந்ததை கண்டு உறவினர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam a family attempt suicide due to loan problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->