கள்ளக்காதல் கலவரமா?.! தலையில் கல்லைப்போட்டு கொடூர கொலை செய்யப்பட்ட நபர்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி கணபதி நகரை சார்ந்தவர் லட்சுமிபதி. இவரது மகனின் பெயர் முருகேசன் (வயது 35)., இவர் அங்குள்ள காரைக்குடி சாலையில் வாகனங்களுக்கு டயர் பஞ்சர் பார்க்கும் கடையை வைத்து பணியை கவனித்து வந்துள்ளார். 

இந்த சூழ்நிலையில்., கடந்த இரண்டு நாட்களாக முருகேசனை காணாததை அடுத்து., அவரை பெற்றோர்கள் தேடி அலைந்து வந்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நேரத்தில்., காவல் துறையினருக்கு அங்குள்ள பனங்குடி பெட்ரோல் நிலையத்திற்கு பின்னர் இருக்கும் காட்டுப்பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில்., ஆண் நபரின் பிணமானது இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து., பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., கணபதி நகரை சார்ந்த முருகேசனை மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட முருகேசன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏதும் கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்டாரா? என்ற விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthukottai man killed police investigation going on about illegal affair murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->