காதலிக்க மறுத்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பொறியியல் பட்டதாரி இளைஞன்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in puthuchery girl rapped by her ex boy friend and his friends police investigation going on
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வானூரை அடுத்துள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியை சார்ந்தவர் நரேஷ் (வயது 19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரது இல்லத்திற்கு அருகில் 9 ம் வகுப்பு பயிலும் மாணவி வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் பழக்கமானது மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே., இது குறித்து இருவரையும் எச்சரித்துள்ளனர். இதனை அடுத்து மனைவி நரேஷிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். தனது காதலி தன்னுடன் என் பேசாமல் இருக்கிறார் என்று பல முறை அவரிடம் கேட்டுள்ளார்.
இவர் எதிரே வந்தாலும் இவரை கவனிக்காதார் போல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் மீண்டும் தன்னிடம் பேச கூறி பல முறை மாணவியை மிரட்டி வந்துள்ளார். ஒரு சமயத்திற்கு மேல் ஆத்திரமடைந்த நரேஷ்., கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுமியை சந்தித்து பேசியுள்ளார். உன்னிடம் மனம் விட்டு சில மணித்துளிகள் பேச வேண்டும் பின்னர் நீ சென்று விடு என்று கூறியுள்ளார்.
இதனை கேட்டு சரி கடைசியாக பேசிவிட்டு செல்லலாம் என்று நரேஷ் அழைத்த நரேஷின் நண்பனின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு குடிக்கும் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து வழங்கியுள்ளார். இதனை அறியாத மாணவி குளிர்பானத்தை அருந்திய சில மணித்துளியிலேயே மயக்கமடைந்துள்ளார். மயக்கமடைந்த சிறுமியை கொடூர முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
மயக்கம் தெளிந்த நிலையில் மாணவி தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணி அவர்களிடம் முறையிடவே., இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி., இல்லத்திற்கு சென்று தாயிடம் விஷயத்தை கூறி கதறியழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து நரேஷ் (வயது 19)., ராஜா (வயது 32) மற்றும் சூர்யா (வயது 21) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., நரேஷ் பொறியியல் துறை பயின்று கொண்டு வந்த மாணவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனையடுத்து இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in puthuchery girl rapped by her ex boy friend and his friends police investigation going on