பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கில்., அடுத்து சிக்கிய முக்கிய குற்றவாளி.! சி.பி.சி.ஐ.டி விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இந்த விஷயம் தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும்., அவர்களிடம் இருந்த காணொளி காட்சிகளில் மூன்று பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மேலும்., திருநாவுக்கரசு கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே தன்னிடம் பயிலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்ததும்., மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில்., சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திருநாவுக்கரசின் பண்ணை இல்லம் மற்றும் அவனுடைய இல்லத்தில் அதிரடி சோதனை மற்றும் விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையில் திருநாவுக்கரசின் இல்லத்தில் இருந்த 10 அலைபேசிகள்., மெமரி கார்டுகள் மற்றும் பென் டிரைவுகள் கைப்பற்றப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான விசாரணையானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் கைதான பார் நாகராஜ்., வசந்தகுமார்., பாபு., செந்தில் ஆகியோர் ஏற்கனவே கைதாகி., பார் நாகராஜ் ஜாமினில் வெளியான நிலையில்., மீதமுள்ள அனைவரும் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் கடந்த 25 ம் தேதியன்று நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில்., 8 ம் தேதி வரை மணிவண்ணனை சிறையில் அடைப்பதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்த நேரத்தில் மணிவண்ணன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யவே., அந்த ஜாமின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்த நிலையில்., சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் சுமார் 11 நாட்கள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி கேட்டனர். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் சுமார் நான்கு நாட்கள் மட்டுமே காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டனர். 

அந்த விசாரணையில்., திருநாவுக்கரசருக்கும் - பார் நகராஜிற்கும் இடையேயான தொடர்பு குறித்தும்., இந்த கும்பலுடன் மணிவண்ணனிற்கு இடையேயான தொடர்பு குறித்தும் தீவிர விசாரணையை நடத்தியுள்ளனர். இந்த விசாரணைக்கு பின்னர் மணிவண்ணனிற்கும் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்பு இருப்பதை உறுதி செய்த காவல் துறையினர்., நீதிமன்ற காவல் நாட்கள் முடிந்ததால் மேலும் விசாரணை செய்ய திட்டமிட்டு நீதிமன்றத்தில் இது குறித்து மனுதாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை ஏற்ற நீதிபதி காவல் துறையினரின் விசாரணைக்கு உத்தரவு வழங்கவே., ரகசிய இடத்திற்கு மணிவண்ணனை அழைத்து சென்ற சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும்., வழக்கு பதிவு செய்யப்பட்ட நாட்களில் திருநாவுக்கரசு தலைமறைவானது மற்றும் மணிவண்ணனும் அதனை போன்றே தலைமறைவானது குறித்த தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுமட்டுமல்லாது இவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்த சமயத்திலேயே பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த வீடீயோக்கள் வெளியாகியிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கும் மணிவண்ணனுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்த தீவிர விசாரணைக்கு பின்னர்., மணிவண்ணன் கூறியதை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். மேலும்., இந்த வழக்கில் இன்னும் பலருக்கு தொடர்பு உள்ளதை அறிந்த காவல் துறையினர் அனைவருக்கும் சம்மன் வழங்கவுள்ளனர். 

மேலும்., அடிதடி வழக்கு மட்டுமே மணிவண்ணனின் மீது பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்., அவனது இணைய கணக்குகளை செய்த சோதனையில் மேலும் பல உண்மைகள் வெளிவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் மணிவண்ணனுக்கும் தொடர்பு இருப்பது இவர்களின் உரையாடல்கள் மூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தீவிர விசாரணையை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in pollachi sexual harassment issue CBCID investigation manivannan is a culprit no 2


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->