பொள்ளாச்சியில் அரங்கேறிய கொடூர செயல்.! திருநாவுக்கரசின் தோழியை தேடி விரையும் காவல்துறை.!! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்.!!
in pollachi issue thirunavukarasu helping girl friend will arrest shortly
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இந்த விஷயம் தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும்., அவர்களிடம் இருந்த காணொளி காட்சிகளில் மூன்று பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., திருநாவுக்கரசு கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே தன்னிடம் பயிலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்ததும்., மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி விசாரணை பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் வைத்து வந்த நிலையில்., இந்த வழக்கானது இன்று முதல் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பெண்கள் அவர்களின் எதிர்காலத்தை கருதி புகார் மனுக்கள் வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில்., இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்., திருநாவுக்கரசின் பெண் தோழி இந்த விஷயத்தின் துவக்கத்தில் அவனுக்கு அடைக்கலம் தந்ததாக தகவல் வெளியானது. பின்னர் அவனிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., சேலத்தில் இருக்கும் பெண் தோழி மூலமாக பழக்கம் வந்த பெண்களையும் சீரழித்தது தெரியவந்தது. இதனையடுத்து சேலத்தை சார்ந்த பெண்ணை கைது செய்வதற்காக காவல் துறையினர் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., அந்த பெண் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
English Summary
in pollachi issue thirunavukarasu helping girl friend will arrest shortly