பொள்ளாச்சியை உலுக்கிய சம்பவம்.!! அடுத்தடுத்து வெளியாகும் பேரதிர்ச்சி தகவல்.!! விசாரணையில் வெளியாகும் தகவலால் அதிர்ச்சியுறும் காவல் துறையினர்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியை சார்ந்த சபரிராஜன் மற்றும் அவனது நண்பர்கள் முகநூலின் மூலமாக பெண்களை வசியப்படுத்தி., அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில்., பல திடுக்கிடும் உண்மைகள் வெளியான வண்ணம் உள்ளது. 

பொள்ளாச்சியில் இருக்கும் ஜோதி நகரை சார்ந்தவன் சபரிராஜன் என்கிற ரிசிவந்த் (வயது 25)., சூளேஸ்வரன்பட்டியை சார்ந்தவன் சதிஷ் (வயது 28)., பக்கோதிபாளையத்தை சார்ந்தவன் வசந்தகுமார் (வயது 24). இந்த வழக்கில் கைதான முதல் குற்றவாளியான சபரிராஜன் ஜவுளிக்கடையை நடத்தி வருகிறான். மேலும்., அவர் பொறியாளர் ஆவார். 

இவனின் நண்பரான பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சார்ந்த திருநாவுக்கரசு என்பவன் இந்த குழுவிற்கு தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான். இவர்கள் அனைவரும் சேர்ந்து கடந்த 2012 ம் வருடத்தின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சுமார் 100 க்கும் மேற்பட்ட இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தும்., ஆபாச காட்சிகளை படமெடுத்தும் மிரட்டி வருகின்றனர். 

அழகான பெண்கள் மற்றும் மாணவிகளின் அலைபேசி எண்ணை திருநாவுக்கரசர் வாங்கி தரவே., அந்த எண்ணில் தொடர்பு கொண்டு சபரிராஜன் மாணவிகளிடம் பேசி ஆசை வார்த்தை கூறி., காதல் வலையில் விழவைப்பார். பின்னர் சம்பவ இடத்திற்கு செல்லும் சபரிராஜன் தனது பெயரை ரிசிவந்த் என்றும் கூறி இது தனது செல்ல பெயர் என்றும் கூறி வந்துள்ளார். 

இவர்களிடம் சிக்கும் பெண்களை அங்குள்ள ஆனைமலை அருகேயுள்ள சினப்பம்பாளையத்திற்கு அருகில் இருக்கும் திருநாவுக்கரசின் பண்ணை இல்லத்திற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்வதும்., இந்த செயலை அவனின் நண்பர்கள் மறைந்திருந்து காட்சிகளாக படம் எடுத்து., பின்னர் அறைக்குள் சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்தும் வந்துள்ளனர். 

இந்த நேரத்தில் இந்த விஷயம் வெளியாகி தமிழகத்தையே உலுக்கிய நிலையில்., முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவானான். பின்னர் காவல் துறையினரை திசை திருப்ப பல ஆடியோக்களையும்., விடீயோக்களையும் வெளியிட்டு காவல் துறையிரின் தேடுதல் வேட்டையை அறிந்து நாடகத்தை அரங்கேற்றினான்.

இதை கண்டுகொள்ளாத காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில் நேற்று அதிரடியாக கைது செய்து அவனிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் சமயத்தில் இருந்து தன்னுடன் பழகும் பெண்களை காதல் வலையில் விழ வைத்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்தும்., நகை மற்றும் பணத்தை பறித்து வந்துள்ளனர். 

இது குறித்து தற்போது தொடர் விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர்., திருநாவுக்கரசு கைதானதும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்ததில் இந்த விசயமானது வெளியாகியுள்ளது. விசாரணைக்கு பின்னர் திருநாவுக்கரசுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் நீதிபதியின் முன்னிலையில் சமர்ப்பித்து., கோயம்புத்தூரில் இருக்கும் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும்., 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை செய்யவும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த விஷயம் குறித்து காவல் துறை அதிகாரி தெரிவித்ததாவது., இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் குற்றவாளிகள்., இளம்பெண்களை காதல் வலையில் விழ வைத்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்ததும்., வீடியோவாக காட்சிப்பதிவு செய்ததும் உண்மை. அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in pollachi girl students cheated by Facebook love and sexual harassment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->