கடன் கொடுத்தவன் வீட்டிற்கு வந்து எடுத்த போட்டோ.! இரண்டு குழந்தைகளை வைத்து மனதை கல்லாகி தாயார் செய்த காரியம்.!!
in nagapatinam woman attempt suicide due to loan problem
நாகப்பட்டினம் மாவட்டத்தை அடுத்துள்ள மயிலாடுதுறையில் உள்ள கிட்டப்பா நகரை சார்ந்தவர் சுரேஷ். இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் லட்சுமி. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து சுமார் 8 வருடங்கள் ஆகும் நிலையில்., 4 வயதுடைய பிரியதர்சினி என்ற பெண் குழந்தையும்., 7 மாதங்களே ஆகும் ஆதீஸ்வரா என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
மகளீர் சுய உதவி குழுவின் தலைவியாக செயல்பட்டு வரும் லட்சுமி., அங்குள்ள தனியார் வங்கியில் குடும்பத்தின் வறுமை காரணமாக கடன் பெற்றிருந்தார். லட்சுமியின் கணவரான சுரேஷிற்கு வரும் வருமானத்தை வைத்து கடனை சிறிது சிறிதாக அடைத்து வந்த நிலையில்., கடந்த சில வாரங்களாக சுரேஷிற்கு வேலை இல்லை என்பதால் கடன் செலுத்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வங்கியில் பணி புரியும் நபர்கள் இல்லத்திற்கு வருகை தந்து., கடனை செலுத்த கூறி தகாத வார்த்தைகளால் பேசி அவரிடம் கடனை செலுத்த கூறியுள்ளனர். மேலும்., அந்த சமயத்தில் வந்திருந்த நபர் அவரது அலைபேசியில் லட்சுமியை புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட அவமானத்தால் கடும் மன உளைச்சலுக்கு லட்சுமி உள்ளாகியுள்ளார்.
இதனால் இனி இந்த உலகில் வாழ கூடாதென்று முடிவெடுத்து மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை செய்துள்ளார். வீட்டில் இருந்து கரும்புகை மற்றும் அலறல் சத்தம் கேட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து., பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் உடலை பார்த்து குழந்தைகள் கதறியழுத சம்பவமானது அந்த கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்., இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
in nagapatinam woman attempt suicide due to loan problem