பொள்ளாச்சியை போலவே நாகபட்டினத்திலும் அரங்கேறிய கொடூரம்.! விசாரணையில் வெளியாகும் தகவலை கேட்டு அதிர்ச்சியாகும் காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெள்ளிப்பாளையம் பேட்டை தெருவை சார்ந்தவர் செந்தில்குமார். இவரது மகனின் பெயர் சுந்தர் (23). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த ஊருக்கு அருகில் உள்ள ஆளியூரை சார்ந்த பெண் ஒருவர் நாகப்பட்டினத்தில் பணியாற்றி வந்தார். 

அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் கடந்த ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில்., சுந்தர் மீது திடீரென சந்தேகம் எழுந்துள்ளது. 

இதனையடுத்து சுந்தரிடம் இருந்து விலக முடிவு செய்து., பழக்கத்தை குறைத்து கொண்டு வந்த பெண்ணை மீண்டும் தனது வலைக்குள் கொண்டு வருவதற்காக., இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளையும்., பல கட்டுக்கதைகளையும் அவிழ்த்து விட்டுள்ளார். 

அந்த பெண்ணிற்கு எந்த விதமான சந்தேகமும் ஏற்படாத வகையில் நம்பிக்கைக்கு பாத்தியப்பட்டவராக தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இந்த நாடகத்தை நம்பிய பெண்ணிடம் சிறிது நாட்கள் கழித்து காரைக்காலில் உள்ள கோவிலுக்கு சென்று வருவோம் என்று தெரிவித்துள்ளார். 

காரைக்காலுக்கு இளம்பெண்ணை அழைத்து சென்ற சுந்தர்., அங்குள்ள விடுதியில் அறையெடுத்து தங்கி குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து வழங்கியுள்ளார். இதனை அறியாத பெண் குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்திலேயே மயக்கடந்துள்ளார். 

இந்த சந்தர்ப்பத்தை உபயோகம் செய்து கொண்ட சுந்தர்., மயக்க நிலையில் இருந்த பெண்ணை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்து காணொளி மற்றும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்துள்ளார்.  

மயக்கம் தெளிந்த நிலையில் நடந்த விஷயத்தை அறிந்து பெண் சுந்தரிடம் தகராறில் ஈடுபடவே., காட்சி பதிவுகளை காண்பித்து இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

இதனால் பதறிய பெண் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருக்கவே., இதனை உபயோகம் செய்து மேலும் சில முறை தனது வக்கிர புத்தியை உபயோகம் செய்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான பெண் விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த முதற்கட்ட விசாரணையில்., இது போன்ற பல பெண்களை காதல் வலையில் விழ வைத்து பலாத்காரம் செய்ததும்., மிரட்டியதும் வெளிவந்துள்ளது. 

இதனையடுத்து இது குறித்த தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்., பொள்ளாச்சியில் இது போன்ற பிரச்சனை நடந்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில்., இந்த சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in nagapatinam girl rapped by her lover like a pollachi issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->