மதுரையில் பரபரப்பு.!! 4 நாட்கள்., 16 வயது மாணவன்.!! ஆசிரியையின் லீலைகள்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லூர் பகுதியை சார்ந்தவர் நிர்மலா. இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது இல்லத்திற்கு அருகில் இருக்கு மாணவ - மாணவியர்களுக்கு டியூஷன் வகுப்பு கற்று கொடுத்து வந்துள்ளார். 

இந்த டியூஷனில் அதே பகுதியை சார்ந்த 16 வயதுடைய மாணவர் ஒருவர் பயின்று வந்துள்ளார். அந்த மாணவரிடம் அவ்வப்போது இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவார் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில்., அங்குள்ள ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனி அறைக்கு மாணவரை அழைத்து சென்று சுமார் 4 நாட்கள் பாலியல் தொந்தரவு வழங்கி வந்துள்ளார். இவரின் அட்டூழியத்தை ஒரு சமயத்திற்கு மேல் தாங்க முடியாத சிறுவன் இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நிர்மலாவின் மீது புகார் அளித்துள்ளனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு ஆசிரியை நிர்மலா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

ஆசிரியையிடம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madurai a teacher giving sexual harassment a 16 years old boy


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->