மதுரையில் அரங்கேறும் மர்ம கொலை கொள்ளைகள்.! மூதாட்டிகளை குறிவைக்கும் கொள்ளை கும்பல்.!! பதறும் மக்கள்.!!
in Madurai a old lady died case turning point on strangers robbery
மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லூர் சத்தியமூர்த்தி நகரில் வசித்து வரும் 87 வயதுடைய மூதாட்டி மாமுதா பீவி. இவர் தனது இல்லத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே வசித்து வரும் வாலிபர் அவரை அவ்வப்போது கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில்., இன்று காலை வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த வாலிபர்., உள்ளே சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த தகவலை செல்லூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தார்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., விசாரணை மேற்கொள்ளும் போது அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்., செல்லூர் கட்டபொம்மன் நகரில் வசித்து வந்த 81 வயதுடைய பாட்டி ஒருவர் கடந்த வியாழக்கிழமையன்று இதே போன்று சந்தேகிக்கும் வகையில் இறந்தது தெரியவந்தது. மேலும்., அவரது இல்லத்தில் ரூ.1 இலட்சம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும்., இறந்த இருவரும் வயதால் முதிர்ந்தவர்கள் என்பதும்., இருவரும் மர்மமான முறையில் இறந்ததும்., அவர்களின் உடலில் எந்தவிதமான வெட்டு காயங்களும் இல்லாத காரணமும் காவல் துறையினர் மற்றும் அங்குள்ள பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in Madurai a old lady died case turning point on strangers robbery