கள்ளக்காதல் கொடூரங்கள்.! கள்ளகாதலியின் விபரீத முறையற்ற ஆசைக்காக கள்ளகாதலன்கள் செய்த கொடூர சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள ஊமச்சிகுளம் திருமாள்புரத்தை சார்ந்தவர் ராஜரத்தினம் (வயது 35). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் திருவண்ணாமையில் வசித்து வரும் நிலையில்., ராஜரத்தினம் மதுரையில் தங்கி இருந்து பணியாற்றி வருகிறார். 

இந்த சூழ்நிலையில்., மர்ம நபர்கள் கொண்ட கும்பலால் கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில்., நான்கு தினங்களுக்கு முன்னதாக ராஜரத்தினம் அலங்காநல்லூர் சாலையில் பிணமாக கிடந்தார். இந்த சடலத்தை கண்ட அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்தும் காவல் துறையினர் ராஜரத்தினத்தின் உடலை கைப்பற்றி., பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

அந்த விசாரணையில்., ராஜரத்தினத்திற்கு கள்ளக்காதல் இருப்பதை அறிந்த காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். காவல் துறை அதிகாரிகளின் விசாரணையில்., ராஜரத்தினத்தின் கள்ளக்காதலி அம்பிகா அவரின் கிராமமான மேலூர் பகுதியை சார்ந்த 23 வயதுடைய அஜித்குமார் என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். 

இவர்களின் பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதை அடுத்து இவர்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த தகவலானது ராஜரத்தினத்திற்கு தெரியவரவே., கள்ளகாதலி அம்பிகாவை எச்சரித்து., அஜித்குமாருடன் கூடிய உறவை கைவிட கூறியுள்ளார். இந்த செய்தியை தற்போதையை கள்ளகாதலன் அஜித்குமாரிடம் தெரிவித்ததை அடுத்து இருவரும் ராஜரத்தினத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். 

சம்பவத்தன்று அம்பிகா அங்குள்ள வீரபாண்டி பகுதிக்கு ராஜரத்தினத்தை வர சொல்லி பேசி கொண்டு இருந்த சமயத்தில்., மறைந்திருந்த அஜித்குமார் மற்றும் அவனின் கூட்டாளிகள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த தகவல்கள் அனைத்தும் அம்பிகா மற்றும் அஜித்குமாரின் மூலம் வாக்குமூலமாக பெறப்பட்டதை அடுத்து., இந்த கொலை செய்த கூட்டாளிகள் ஐவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madurai a man killed by illegal affair when her friend have lot of friend


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->