சொந்த மனைவியை வரதட்சணைக்காக ஆபாச படம் எடுத்து மிரட்டிய கணவன் மற்றும் குடும்பத்தார்.!! முகநூல் காதலால் அரங்கேறிய சோகம்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலத்தில் யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்., இணையத்தளத்தில் காதல் என்ற வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைக்காதீர்கள் என்று பல விதமான செய்திகள் தொடர்ந்து வந்தாலும்., அந்த செய்தியை கண்டுகொள்ளாமல் இவங்களுக்கு வேற வேலை இல்லை என்று மனதில் நினைத்து கொண்டு பலர் அந்த செய்திகளை கடந்து செல்கின்றனர். 

சிலர் அந்த செய்திகளை படித்து நாட்டு நடப்பை நன்றாக அறிந்திருந்தாலும்., சில எதிர்பாராத நேரத்தில் நன்கு படித்து உள்ள நபர்களும் இணைய காதலை நம்பி தங்களின் அற்புத வாழ்க்கையை இழந்து., தினமும் அதனை எண்ணி எண்ணி வருந்தி கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில்., தற்போது பொள்ளாச்சியில் அரங்கேறிய சம்பவமானது தமிழகத்தையே உலுக்கியது. 

in pollachi sexual harassment issue is convert investigation CBCID to CBI

கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கு முகநூலின் மூலமாக மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி பகுதியை சார்ந்த அஜித்குமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது இவர்களுக்கு இடையே நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் தங்களின் காதலை இல்லத்திற்கு தெரியப்படுத்தவே., எதிர்ப்புகள் கிளம்பினாலும் பின்னர் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில்., திருமணம் முடிந்த சில நாட்களிலேயே வரதட்சணை கொடுமைக்கு அஜித்குமாரின் குடும்பத்தினர் உட்படுத்தியுள்ளனர். மேலும்., இவர்களின் இல்லறத்தை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்ட துவங்கியுள்ளனர். 

வரதட்சணை பணத்தை வழங்கவில்லை என்றால் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை இணையத்தில் பரப்பிவிடுவதாக அஜித்குமார் மிரட்டியுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவர்., மதுரையில் உள்ள மாவட்ட ஆட்சியரின் அலுவலத்திற்கு வந்து புகாரை அளித்துள்ளார். இவரின் புகாரினை ஏற்ற மாவட்ட ஆட்சியர் தக்க விசாரணை செய்ய கூறி காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai a girl complaint collector office her husband wrong activities


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->