என்றுதான் தீரும் இந்த சோகம்.! மதுரையில் அரங்கேறிய துயர சம்பவம்.!! கண்ணீரில் செய்த தவறை எண்ணி வருந்தும் கணவன்.!!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள எழுமலை சந்தன மாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் பிச்சையாண்டி. இவரது மனைவியின் பெயர் பாரதி (வயது 28). பிச்சையாண்டிக்கு இருந்த மதுப்பழக்கத்தின் காரணமாக இவர்களது குடும்பத்தின் தகராறு இருந்துள்ளது. 

இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்., இனி எந்த சமயத்திலும் மதுவை அருந்தமாட்டேன் என்று தனது மனைவிக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார். 

சத்தியத்தை மீறாமல் கடந்த 4 மாதங்களாக மதுவை அருந்தாமல் இருந்த வந்த பாண்டி., திடீரென நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு இல்லத்திற்கு வந்துள்ளார். இதனை கண்டு கடும் மன வேதனைக்கு பாரதி உள்ளாகியுள்ளார். 

இதனால் வருத்தமடைந்த அவர் எதற்கு சத்தியத்தை மீறி மது அருந்தினீர்கள் என்ற கேட்டதற்கு எந்த விதமான பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவதியடைந்த பாரதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இது குறித்த தகவலை அறிந்த காவல் துறையினர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai a girl attempt suicide due to her husband drinks activities


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->