அந்த பழக்கத்தை கைவிடாமல் இருந்த கணவன்.!! நள்ளிரவில் அந்த இடத்தில்., சுடுதண்ணீரை ஊற்றி பதறவைத்த மனைவி.!!
in kumpakonam a wife trowed hot water his husband drink activity
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை அடுத்துள்ள அன்னலக்ரஹாரம் பகுதியை சார்ந்தவர் சேகர் (55). இவர் பாத்திரத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் செல்வி (வயது 50). சேகருக்கு மது அருந்தும் பழக்கமானது இருந்து வந்துள்ளது.
இதனால் தினமும் வீட்டிற்கு வரும் சமயத்தில் மதுபானத்தை அருந்திவிட்டு வந்துள்ளார். இதனால் சேகருக்கும் அவரது மனைவி செல்விக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தினமும் மது அருந்திவிட்டு வரும் பழக்கத்தை கைவிட கூறி செல்வி பல வருடங்களாக சேகரை கண்டித்தும் எச்சரித்தும் வந்துள்ளார். இந்த நிலையில்., சம்பவத்தன்று மது அருந்திவிட்டு கடுமையான போதையில் தள்ளாடியவாறு வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த சேகர் படுத்து உறங்காமல்., சாப்பாடு செய்யவில்லை என்று கூறி தகராறில் ஈடுபடவே., ஆத்திரமடைந்த செல்வி நள்ளிரவில் தண்ணீரை கொதிக்க வைத்து கணவரின் மீது ஆவிபறக்க ஊற்றியுள்ளார்.
சூடான தண்ணீர் உடலில் பட்டதும் ஐயோ.. அம்மா... காப்பாத்துங்கள்... சுடு தண்ணீரை கொதிக்க கொதிக்க ஊற்றிவிட்டாள் என்று கதறியுள்ளார். இவரின் கதறலை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பதறியபடி துடிதுடித்த சேகரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சூடான் நீரை ஊற்றியதில் சேகரின் நெஞ்சு மற்றும் கை பகுதிகளில் தீயகாயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்., இதனை அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவமானது நள்ளிரவில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
in kumpakonam a wife trowed hot water his husband drink activity