சொத்துக்காக சகோதரியின் குடும்பத்தை கூலிப்படை மூலம் கொலை செய்த கொடூர அண்ணன்.!! வெளியான அதிர்ச்சி காரணம்.!! காலில் விழுந்து கதறிய கடைசி நொடிகள்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தோவாளை அருகிலுள்ள கிருஷ்ணன்புதூர் அம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (48). பூ வியாபாரியான இவருக்கு கல்யாணி (வயது 40) என்ற மனைவி உள்ளார். இவர்களின் மகள் பெயர் ஆர்த்தி என்கிற இலட்சுமி (வயது 16). இலட்சுமி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

தினமும் காலையில் பணிக்கு செல்லும் மணிகண்டன்., நேற்று வழக்கம் போல காலையில் பணிக்கு சென்று இரவு சுமார் 10 .15 மணியளவில் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ளார். வீட்டிற்கு வந்த இவர் மனைவி மற்றும் மகளுடன் இரவு உணவை அருந்திவிட்டு தூங்குவதற்கு தயாராகியுள்ளனர். அந்த நேரத்தில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டதால்., கல்யாணி யார்? என்று காண்பதற்காக சென்றுள்ளார். 

வீட்டின் கதவை திறந்தவுடன் வீட்டின் வாயிலில் 4 பேர் பயங்கர ஆயுதங்களுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சியான இவர் செய்வதறியாது திகைக்கவே., 4 பேர் கொண்ட கும்பல் கல்யாணியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் நிலை குலைந்த அவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவரின் சத்தத்தை கேட்டு பதறியபடி வந்த மணிகண்டன் மற்றும் அவரது மகள் இலட்சுமியை அந்த கும்பல் கண்டு கொண்டனர். 

இவர்களை பார்த்த கும்பல் அவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்., மேலும்., இலட்சுமிக்கு கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இவர்களின் அபயக்குரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் பதறிய படி இல்லத்திற்குள் வரவே., இவர்களை கண்ட கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். 

அங்கு உயிருக்கு போராடிய மணிகண்டன் மற்றும் இலட்சுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., கல்யாணியின் சகோதரர் சுடலையாண்டி கூலிப்படை மூலமாக இவரை கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. 

இந்நிலையில்., மருத்துவமனையில் உயிருக்கு போராடிய மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனது தாய் மற்றும் தந்தை கொடூர கும்பலால் வெட்டி வீழ்த்தப்பட்டதை கண்ட இலட்சுமி., அந்த பயத்தில் இருந்து இன்னும் மீண்டு எழாமல் இருக்கிறார். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது., கல்யாணியுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர் என்பதும்., இவர்களில் 4 பேர் பெண்கள் மற்றும் 3 ஆண்கள் தெரியவந்தது.

கல்யாணியின் ஒரு சகோதரி இறந்துவிட்ட நிலையில்., இவர்களின் பூர்வீக சொத்தாக சுமார் நாலரை ஏக்கர் இருந்துள்ளது. இந்த இடம் இருக்கும் இடம் தேவாளையில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் என்பதால்., அந்த இடத்தின் மதிப்பும் அதிகரிக்க இவர்களுக்குள் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக ஏற்கனவே மாவட்ட காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு., வரும் 30 ம் தேதிக்குள் பணத்தை வழங்க உத்தரவிட்டுள்ளனர். 

தொடர்ந்து பணத்தை வழங்க மறுத்து வந்ததால்., இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட வாய்ப்பிருந்த நிலையில்., தனது தங்கை மற்றும் அவர்களின் குடும்பத்தாரை கூலிப்படை வைத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும்., சுடலையாண்டி மற்றும் கூலிப்படையை சார்ந்தவர்கள் தலைமறைவாகியுள்ளதால் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanniyakumari a brother killed her sisters family due to land property problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->