வீட்டு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி., சிறுமிக்கு உணவு கூட வழங்காமல் மிரட்டி விபச்சாரத்திற்கு உட்படுத்திய கொடூரம்.!!
in kanchipuram a girl sexually abused by her near home husband and wife
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரை அடுத்துள்ள மானாம்பதி கண்டிகை பகுதியை சார்ந்தவர் தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்த சமயத்தில் இவர்களின் வீட்டிற்கு அருகே அற்புதராஜ் என்ற இளைஞரும்., அவரது நண்பரான வேளாங்கண்ணி என்பவரும் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., கடந்த நவம்பர் மாதத்தின் 17 ம் தேதியன்று பெண் குழந்தையுடன் வசித்து வந்த தம்பதியின் இல்லத்திற்கு வருகை தந்து., அவரது மகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்க கூறி கூறியுள்ளனர். இதனை கேட்ட பெற்றோர் குழந்தையை வேலைக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.
மீண்டும் சில நாட்கள் கழித்த பின்னர் வீட்டிற்கு வருகை தந்த வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ்., இவர்களின் மகளை வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்க கூறியும்., வேலை பிடிக்கவில்லை என்ற பட்சத்தில் அவரை திருப்பி அனுப்பிவிடுவோம் என்று கூறியுள்ளனர்.
அதிகளவில் வற்புறுத்தி கேட்டதை அடுத்து அவர்களுடன் மகளை வேலைக்காக அனுப்பி வந்த நிலையில்., கடந்த ஈஸ்டர் பண்டிகைக்கு மகளை வீட்டிற்கு அனுப்பி வைக்க கூறி பெற்றோர் கூறியுள்ளனர். இதனை கேட்ட வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் அலட்சியத்துடன் உங்களுக்கு வேண்டும் என்றால் வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் 19 ம் தேதியதன்று மகளை வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில்., சுமார் இரண்டு நாட்கள் கழித்த பின்னர் பணிக்கு அழைத்து செல்கிறேன் என்ற பெயரில் மீண்டும் இல்லத்திற்கு வந்துள்ளனர். இவர்களை கண்ட பெற்றோரின் மகள் அவர்களுடன் செல்லமாட்டேன் என்று கண்கலங்கி நின்றுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிடம் கேட்ட போது., அற்புதராஜ் மற்றும் வேளாங்கண்ணி சிறுமியை சென்னை., செங்கல்பட்டு மற்றும் வடபழனி உள்ளிட்ட இடங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விபச்சாரத்திற்கு உபயோகம் செய்ததும்., இந்த காட்சிகளை அலைபேசியில் பதிவு செய்ததும் தெரியவந்தது.
இந்த கொடூரங்களை அரங்கேற்றிய இருவரும் இது குறித்து பெற்றோரிடம் கூறும் பட்சத்தில் ஆபாச படத்தை இணையத்தில் வெளியிட்டு பெற்றோரை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். பெற்றோரின் உயிருக்கு பயந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறாமலே இருந்து வந்துள்ளார். மேலும்., பல நாட்கள் உணவும் அளிக்காமல்., சிறுமியை உடலளவில் தொடர் பலாத்காரத்திற்கும்., கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் உட்படுத்தியுள்ளனர்.
இந்த விஷயத்தை கேட்டறிந்த பெற்றோர் பெரும் துயரத்திற்கு உள்ளாகவே., இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இது குறித்த வழக்குப்பதிவை ஏற்ற மாவட்ட ஆட்சியர் இது குறித்த விசாரணையை மேற்கொள்ள காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in kanchipuram a girl sexually abused by her near home husband and wife