கோவிலுக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்ற ஆட்டோ ஓட்டுனர்கள்.! இறுதியில் அரங்கேறிய கொடூரம்.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in kanchipuram a girl kidnapped and rapped by auto drivers
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். தனது பெற்றோர்களுடன் வசித்து வரும் சிறுமி., அடிக்கடி கோவிலுக்கு சென்று வருவது வழக்கம்.
அந்த வகையில்., சம்பவத்தன்று காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலுக்கு செல்வதற்கு சிறுமி ஆட்டோவில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் கோவிலின் நடை சாத்தப்பட்டு இருப்பதை கண்ட ஆட்டோ ஓட்டுநர்., கோவிலின் நடை சாற்றியுள்ளது. அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து செல்கிறேன் என்று கூறியுள்ளான்.
இதனை நம்பிய சிறுமி அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறவே., ஆட்டோ ஓட்டுநர் அங்குள்ள ராஜாஜி சந்தைக்கு பின்புறத்தில் இருக்கும் இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளான்.
மேலும்., இவர்கள் அங்கு வருவதற்குள் ஆட்டோ ஓட்டுனரின் நண்பர்களை சம்பவ இடத்திற்கு வர சொல்லி., சிறுமிக்கு மயக்க மருந்தை வழங்கி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். சிறுமி மயக்கத்தில் இருந்து எழுந்ததும் தன்னிலை அறிந்து கதறியழுது., இது குறித்து அவர்களிடம் வினவியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுனர்கள் இது குறித்து யாரிடமும் கூறும் பட்சத்தில் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்கள். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி., இல்லத்திற்கு சென்று தனது பெற்றோர்களிடம் நடந்ததை கூறி கதறியழுத்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் ராஜா மற்றும் அவனது நண்பர் தேவாவை கைது செய்தனர்.
மேலும்., தலைமறைவான மற்றொரு ஆட்டோ ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
English Summary
in kanchipuram a girl kidnapped and rapped by auto drivers