மோட்டார் சைக்கிளில் கால்கள் உரசியபடியே இழுத்து செல்லபட்ட இளம்பெண்.! விரட்டி பிடித்த இளைஞர்களை காத்திருந்த பெரும் அதிர்ச்சி.!!  - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையை அடுத்துள்ள மேட்டுக்கடை பகுதியை சார்ந்தவர் முனியப்பன் (வயது 28). இவரது மனைவியின் பெயர் நிவேதா (வயது 19). இவர்கள் இருவருக்கும் சொந்த ஊராக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிமாகோ மாவட்டத்தில் இருக்கும் ஏலே பகுதியை சார்ந்தவர்கள் ஆவர். 

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர்., ஈரோடு மாவட்டத்திற்கு வந்து அங்குள்ள பெருந்துறை மேட்டுக்கடை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 

தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக முனியப்பன் பணியாற்றி வரும் நிலையில்., நிவேதா மேட்டுக்கடை பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்., மனைவியின் மீது திடீரென எழுந்த சந்தேகத்தை அடுத்து., இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த தகராறு அவ்வப்போது நடைபெற்று வந்த நிலையில்., நேற்று இரவில் வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் கொண்ட முனியப்பன் தனது மனைவியின் கழுத்தை துண்டாக அறுத்து துடிதுடிக்க கொலை செய்துள்ளான். 

மனைவியை கொலை செய்து விட்டு அவரின் உடலை வாய்களில் வீச முடிவு செய்து இருசக்கர வாகனம் மூலமாக கொண்டு சென்று கொண்டு இருந்த சமயத்தில்., இவரின் செயல்பாடுகளை கண்ட பொதுமக்கள் சந்தேகமடைந்தனர். 

மேலும்., இவரது மனைவியின் கால்கள் தரையில் உரசும் படி சென்றதை அடுத்து., முனியப்பனை அதே பகுதியை சார்ந்த நான்கு இளைஞர்கள் துரத்தி சென்று கொண்டு இருந்தனர். இதனை கவனித்த முனியப்பன்., வாகனத்தை வேகமாக இயக்கவே., அங்குள்ள பெரியமிளாமலை வாய்க்கால் பகுதியில் வாகனம் நிலைதடுமாறியதில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து வாய்களில் இறங்கி தப்பியோடினர். 

இதனை கண்ட இளைஞர்கள் அவரை விரட்டி பிடித்து விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., முனியப்பனின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., குற்றவாளியை பிடித்து தந்த இளைஞர்களுக்கு பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம் பாராட்டுகளை தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode wife killed by her husband due to doubt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->