கள்ளக்காதல் மோகத்தால் மூன்று முறை அறிவுரை கூறியும் கேட்காத அவலம்.! கள்ளகாதலனுடன் சிறகடித்த மனைவி.!! மனதை கல்லாக்கி கணவன் செய்த காரியம்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் டிரஸ்டி காலனி பகுதியை சார்ந்தவர் முத்துசாமி. இவரது மகனின் பெயர் பாலமுருகன் (வயது 36). இவர்களுக்கு பாச்சலூர் பகுதியில் காபி தோட்டமானது உள்ளது. 

திண்டுக்கல் அருகேயுள்ள அம்மாபட்டியை சார்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 25). இவருக்கும்., பாலமுருகனுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் சுபாஷ் கிருஷ்ணன் என்ற இரண்டரை வயதுடைய மகன் உள்ளார். 

இந்நிலையில்., கிருஷ்ணவேணிக்கும் அம்மாபட்டி பகுதியை சிறந்த கண்ணன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

கண்ணன் சொந்தமாக கால்டாக்ஸி வைத்து பெங்களூரில் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணவேணிக்கும் - அவரது கணவரின் பாலமுருகனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக., கோபமடைந்த கிருஷ்ணவேணி அடிக்கடி கண்ணனை சந்தித்து வந்துள்ளார். 

மேலும்., இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை உறவினர்களுக்கு தெரியவந்து., கிருஷ்ணவேணியை சுமார் மூன்று முறை சமாதானம் செய்து வைத்து வந்துள்ளார். கணவருடன் சேர்ந்து வாழ கூறி அறிவுரைகள் கூறியுள்ளனர். 

இதன் காரணமாக பாலமுருகன் அவரது தோட்டத்திற்கு சென்றுவிடவே., கிருஷ்ணவேணி தனது தாயாரின் இல்லத்திற்கு செல்வதாக கூறி., தாயாரின் இல்லத்தில் மகனை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். 

இதனை அறிந்த பாலமுருகன் கடும் மன உளைச்சலில் தவித்து வந்த நிலையில்., வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் பாலமுருகனின் பெற்றோர் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால்., சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்த போது., அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து விஷயம் குறித்து தகவல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பாலமுருகனின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dindukkal husband attempt suicide due to his wife illegal affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->