கள்ளக்காதலனை கொடூர கொலை செய்த பெண்.! வாக்குமூலத்தில் தெரிவித்த பகீர் தகவல்.!!
in cudallore illegal affair end to killing
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூருக்கு அடுத்துள்ள தென்குத்துட்டு கிராமத்தை சார்ந்தவர் அய்யாபிள்ளை. அதே பகுதியை சார்ந்த பெண் பரிமளா. இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில்., இந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்த நிலையில்., இவர்களுக்குள் கடந்த சில மாதங்களாகவே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில்., கடந்த 13 ம் தேதியன்று உல்லாசத்தை மையப்படுத்தி எழுந்த பிரச்சனையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமானது தகராறாக மாறவே., ஆத்திரமடைந்த பரிமளா கள்ளக்காதலன் அய்யாபிள்ளையை அடித்து கொலை செய்து வீட்டின் கழிவுநீர் தொட்டியில் வைத்துள்ளார்.
இந்த சமயத்தில் அய்யாபிள்ளையின் சகோதரர் நீண்ட நாட்களாக அவரை காணவில்லை என்று சகோதரர் வந்து விடுவார் என்று எண்ணி இருந்த நேரத்தில் சகோதரர் குறித்த எந்த விதமான தகவலும் இல்லாததால்., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., கள்ளத்தொடர்பு விவகாரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பரிமளாவிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில்., கள்ளக்காதலனை கொலை செய்தது குறித்து ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனை அறிந்த காவல் துரையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு கழிவுநீர் தொட்டியில் இருந்த உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக்க அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரிமளாவிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in cudallore illegal affair end to killing